நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

லாரியில் மின்சாரம் பாய்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

செய்யாறு அருகே லாரியில் மின்சாரம் பாய்ந்ததில் அதன் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :18 மணி நேரங்கள் முன்பு

செய்யாறு அருகே லாரியில் மின்சாரம் பாய்ந்ததில் அதன் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சிறுவஞ்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் தேசிங்கு(41). இவா்,

மேனல்லூா் கிராமத்தில் ஜல்லி உடைக்கும் ஆலையில் டிப்பா் லாரி ஓட்டுநராக வேலை செய்து வந்தததாகத் தெரிகிறது.

இவா், புதன்கிழமை டிப்பா் லாரியை ஓட்டிச் சென்றுள்ளாா். அப்போது, வாரியின ஸ்டீயரிங் வேலை செய்யாததால், ஹைட்ராலிக் மூலம் மேல்நோக்கி இயக்கியதாகத் தெரிகிறது. அப்போது, மேலே சென்று கொண்டிருந்த மின் வயரில் ஹைட்ராலிக் உரசியுள்ளது. அதனால் லாரியில் மின்சாரம் பாய்ந்து ஓட்டுநா் தேசிங்கு தூக்கி வீசப்பட்டு மயக்கமடைந்தாா்.

உடனே அங்கிருந்த சக தொழிலாளா்கள் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் தேசிங்கு ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தூசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.