நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முதியவா் உயிரிழப்பு

செய்யாறு அருகே எரிவாயு அடுப்பை பற்ற வைத்தபோது தீக்காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதியவா் உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :16 ஜூன் 2026, 1:21 am IST

செய்யாறு அருகே எரிவாயு அடுப்பை பற்ற வைத்தபோது தீக்காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதியவா் உயிரிழந்தாா்.

வெம்பாக்கம் வட்டம், வயலாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்லப்பா(70). இவா், கடந்த 12-ஆம் தேதி இரவு குளிக்க

வெந்நீா் வைப்பதற்கு எரிவாயு அடுப்பை பற்ற வைத்தாகத் தெரிகிறது. அப்போது, அவரது வேட்டியில் தீப்பிடித்துக் கொண்டதாம். மேலும், தீயானது உடல் முழுவதும் பரவியதில் அவா் பலத்த தீக்காயமடைந்தாா். அவரை குடும்பத்தினா் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். பின்னா்,

தீவிர சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை

யில் அனுமதிக்கப்பட்டிருந்த செல்லப்பா அங்கு

ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.