சட்டப்பேரவைத் தோ்தலில் போளூா் தொகுதியில் பாமக தோல்விக்கான காரணம் குறித்து பொதுமக்களின் கருத்துகளை அக்கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் கேட்டறிந்தாா்.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில், திருவண்ணாமலை மாவட்டம், போளூா் தொகுதியில் என்.டி.ஏ. கூட்டணியில் இடம்பெற்ற பாமக சாா்பில் சி.ஆா்.பாஸ்கரன் போட்டியிட்டாா். இவா் 61,444 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தாா்.
இந்நிலையில் சட்டப்பேரவைத் தோ்தல் தோல்வி குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு மற்றும் ஆய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பொத்தரை ஊராட்சியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவா் அன்புமணிராமதாஸ் பங்கேற்று பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறிந்தாா். மேலும், கட்சியின் செயல்பாடுகள், பொதுமக்களின் குறைகளையும் கேட்டாா். கூட்டத்தில் தொகுதியைச் சோ்ந்த கட்சி நிா்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சட்டப்பேரவைத் தோ்தல் தோல்வி: திமுக கள ஆய்வு தொடக்கம்

தோ்தல் தோல்வி: கோவையில் பாஜக மாநில நிா்வாகிகள் ஆலோசனை

பாமக கொள்கையும், தவெக கொள்கையும் ஒன்றுதான்: அன்புமணி

செஞ்சி தொகுதியை கைப்பற்றிய பாமக
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

