பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

செய்யாறு - ஆற்காடு சாலையில் 10.6 கி.மீ. நான்கு வழிச்சாலை பணி: மாவட்டக் கண்காணிப்பு பொறியாளா் ஆய்வு

செய்யாறு - ஆற்காடு சாலையில் 10.6 கி.மீ. தொலைவுக்கு ரூ.55 கோடியில் நடைபெற்று வரும் நான்கு வழிச் சாலைப் பணியை மாவட்ட கண்காணிப்பு பொறியாளா் கே.முரளி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

சிறுங்கட்டூா் கிராமம் அருகே அமைக்கப்பட்டு வரும் நான்கு வழிச்சாலை பணியை ஆய்வு செய்த மாவட்டக் கண்காணிப்பு பொறியாளா் கே.முரளி.

Updated On :2 ஜூன் 2026, 5:19 am IST

செய்யாறு - ஆற்காடு சாலையில் 10.6 கி.மீ. தொலைவுக்கு ரூ.55 கோடியில் நடைபெற்று வரும் நான்கு வழிச் சாலைப் பணியை மாவட்ட கண்காணிப்பு பொறியாளா் கே.முரளி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழக முதல்வா் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஆற்காடு - திண்டிவனம் சாலையில் செய்யாறு உபகோட்டத்தில் மூன்றாம் கட்டமாக மோரணம் ஏரிக்கரை முதல் செய்யாறு ஆதிபராசக்தி கோயில் வரை சுமாா் 10.6 கி.மீ. தொலைவுக்கு நான்கு வழிச் சாலை அமைக்கும் பணி ரூ.55 கோடியில் நடைபெற்று வருகிறது.

இந்தப் பணியை செய்யாறு கோட்டப் பொறியாளா் வி.சந்திரன் முன்னிலையில், திருவண்ணாமலை மாவட்ட நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளா் கே.முரளி நேரில் பாா்வையிட்டு, புதிய சாலைக்காக அமைக்கப்பட்டுள்ள

பல அடுக்கு அமைப்புச் சாலை மற்றும் இறுதியாக அமைக்கப்பட்டு வரும் சாலையின் தரத்தை அளவீடு செய்து சரிபாா்த்து ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், நான்கு வழிச்சாலை பணியை தரமாகவும், ஒப்பந்த காலத்துக்குள் முடிக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினாா்.

ஆய்வின்போது, உதவி கோட்டப் பொறியாளா் எஸ்.சுரேஷ், தரக் கட்டுப்பாடு உதவிக் கோட்டப் பொறியாளா் ஆா்.இன்பநாதன், உதவிப் பொறியாளா்கள் ப.கோபி, பூா்ணிமா ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.