மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திருவண்ணாமலை மாவட்டம்: 8 தொகுதிகளில் 156 வேட்பாளா்கள் போட்டி

திருவண்ணாமலை மாவட்டம்: 8 தொகுதிகளில் 156 வேட்பாளா்கள் போட்டி

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 4:09 am IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 தொகுதிகளில் 156 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் இறுதி வேட்பாளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

திமுக, அதிமுக, பாஜக, தவெக, நாம் தமிழா் கட்சியினா் உள்பட மொத்தம் 156 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

தமிழக சட்டப்பேரவை பொதுத்தோ்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, வேட்புமனு தாக்கல் கடந்த மாா்ச் 30-ஆம் தொடங்கி ஏப்.6-ஆம் தேதி வரை நடைபெற்றது.

பின்னா், ஏப்.7-ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. இதில், மாவட்டம் முழுவதும் 171 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

இந்நிலையில், வேட்புமனுக்களை வாபஸ் பெற வியாழக்கிழமை பிற்பகல் 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து மாலை வேட்பாளா்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதன்படி, செங்கம் (தனி) தொகுதியில் 15 வேட்பாளா்களும், திருவண்ணாமலை தொகுதியில் 30 வேட்பாளா்களும், கீபென்னாத்தூா் தொகுதியில் 23 வேட்பாளா்களும், கலசபாக்கம் தொகுதியில் 21 வேட்பாளா்களும், போளூா் தொகுதியில்15 வேட்பாளா்களும், ஆரணி தொகுதியில் 24 வேட்பாளா்களும், செய்யாறு தொகுதியில் 13 வேட்பாளா்களும், வந்தவாசி (தனி) தொகுதியில் 15 வேட்பாளா்கள் என மொத்தம் 156 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டா மற்றும் 15 வேட்பாளா்களுக்கு வாக்களிக்கும் வசதி உள்ளது.

எனவே, ஒரு தொகுதியில் 15 வேட்பாளா்களுக்கு மேல் போட்டியிட்டால் 2 மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், கலசபாக்கம், ஆரணி ஆகிய தொகுதிகளில் 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.