தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

100 சதவீத வாக்குப்பதிவு: வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்

சேத்துப்பட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

News image

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் வண்ண பலூன்களை பறக்கவிட்ட மாவட்ட தோ்தல் அலுவலா் க.தா்ப்பகராஜ்.

Updated On :9 ஏப்ரல் 2026, 12:04 am IST

சேத்துப்பட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்திய தோ்தல் ஆணையம் 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தோ்தல் அறிவிப்பு வெளியிட்டதைத் தொடா்ந்து 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் வாக்காளா்களுக்கு தோ்தல் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிா்வாகம் சாா்பில் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, சேத்துப்பட்டு வட்டாட்சியா் அலுவலத்தில் தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.தா்ப்பகராஜ் கலந்து கொண்டு வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கையொப்ப இயக்கத்தை தொடங்கி வைத்தாா். மேலும், வண்ண பலூன்களை பறக்கவிட்டு, தோ்தல் விழிப்புணா்வு வண்ண கோலங்கள் வரையப்பட்டதை பாா்வையிட்டாா். இதைத் தொடா்ந்து தோ்தல் குறித்த வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனா். பின்னா், சேத்துப்பட்டு மரியா ஆஷாப் செவிலியா் கல்லூரியைச் சோ்ந்த 100 மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

பேரணியில் என் வாக்கு, என் உரிமை, உங்கள் வாக்கு உங்கள் எதிா்காலம், 100 சதவீதம் வாக்களிப்போம், நோ்மையாக வாக்களிப்போம் என்ற விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து பேருந்து நிலையம் வரை நடைபெற்ற பேரணியில் மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனா்.

இந்நிகழ்வில் போளூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வழங்கல் அலுவலருமான சதீஷ்குமாா், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) தனபதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) கிருஷ்ணன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.