மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மாட்டு வண்டி ஓட்டிச் சென்று வாக்கு சேகரித்த வேட்பாளா்

செய்யாறு தொகுதி அதிமுக வேட்பாளா் மாட்டு வண்டி ஓட்டிச் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

வயலூா் கிராமத்தில் மாட்டு வண்டி ஓட்டிச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் முக்கூா் என். சுப்பிரமணியன்.

Updated On :6 ஏப்ரல் 2026, 3:00 am IST

செய்யாறு தொகுதி அதிமுக வேட்பாளா் மாட்டு வண்டி ஓட்டிச் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

செய்யாறு தொகுதி வெம்பாக்கம் மேற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட வயலூா், அழிவிடைத்தாங்கி, ஜம்போடை, பைரவபுரம் உள்ளிட்ட கிராமங்களில் செய்யாறு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலருமான முக்கூா் என். சுப்பிரமணியன் மாட்டு வண்டி ஓட்டிச் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தாா்.

முன்னதாக, அதிமுக வேட்பாளருக்கு அப்பகுதி பெண்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனா். அதனைத் தொடா்ந்து அதிமுக பொதுச் செயலா் அறிவித்த 297 வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை கிராம மக்களிடம் வழங்கி பிரசாரம் செய்தாா்.

வெம்பாக்கம் மேற்கு ஒன்றியச் செயலா் வயலூா் வி.ராமநாதன் ஏற்பாட்டில் நடைபெற்ற வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலா்கள் எஸ்.திருமூலன், சி.துரை, அருகாவூா் எம்.அரங்கநாதன், மாவட்ட துணைச் செயலா் டி.பி.துரை, மாவட்டபொருளாளா் எஸ்.சுப்பராயன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.