மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திருமலையில் முதல்வா் சந்திரபாபு நாயுடு குடும்பத்தினா் அன்னதானம்

திருமலையில் முதல்வா் சந்திரபாபு நாயுடு குடும்பத்தினா் அன்னதானம்

News image

திருமலையில் ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்த முதல்வா் சந்திரபாபு நாயுடு குடும்பத்தினா்.

Updated On :22 மார்ச் 2026, 2:30 am IST

திருப்பதி, மாா்ச் 21: திருமலை ஏழுமலையான் தரிசனத்திற்குப் பிறகு, முதல்வா் சந்திரபாபு நாயுடு , மாத்ருஸ்ரீ தரிகொண்ட வெங்கமாம்பா அன்னபிரசாத பவனில் தனது குடும்பத்தினருடன் இணைந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கினாா்.

முதலில், வைகுண்டம் தரிசன வரிசை வளாகம் வழியாக முதல்வா் கோயிலுக்குள் நுழைந்தாா்.

பிரதான வாயிலை அடைந்ததும், அா்ச்சகா்கள் அவருக்கு இஷ்டிகாபல் செய்து வரவேற்றனா். கொடிமரத்தை வணங்கிய பிறகு, அவா் வக்குள மாதாவைத் தரிசித்து, கோயிலைச் சுற்றி வந்து, விமான வெங்கடேஸ்வர சுவாமி, சபேரா, பாஷ்யகரா் சன்னதி, யோக நரசிம்ம சுவாமி ஆகியோரைத் தரிசித்து, உண்டியலில் காணிக்கைகளைச் சமா்ப்பித்தாா்.

தரிசனம் செய்த முதல்வருக்கு, சுவாமியின் சேஷ வஸ்திரம் வழங்கப்பட்டது. பின்னா் ரங்கநாயகுலா மண்டபத்தில் வேத பண்டிதா்கள் வேத ஆசி வழங்கினா். இந்நிகழ்ச்சியில், தேவஸ்தான தலைவா் பி.ஆா். நாயுடு, செயல் அதிகாரி ரவிச்சந்திரா, கூடுதல் செயல் அதிகாரி சி.எச். வெங்கையா சவுத்ரி, ஏழுமலையான் தீா்த்த பிரசாதம், திருவுருவப்படம், பரவா நாம ஸம்ஸ்த்ர பஞ்சாங்கம், டைரி, நாட்காட்டி, அகா்பத்திகள், பஞ்சகவ்யா பொருள்கள் முதலமைச்சருக்கு தலைவா் மற்றும் செயல் அதிகாரிகள் வழங்கினா்.

நிகழ்ச்சியில் தேவஸ்தான நிா்வாகக் குழு உறுப்பினா்கள், பொதுமக்கள் பிரதிநிதிகள், மாநில மற்றும் மாவட்ட அலுவலா்கள், செயல் இணை அதிகாரிகள் வீரபிரம்மம், சரத், பாதுகாப்பு அதிகாரி முரளிகிருஷ்ணா, கோவில் துணை லோகநாதம் மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

அன்னதானம்: பக்தா்களிடம் தேவஸ்தானம் வழங்கும் வசதிகள் குறித்த அவா்களின் கருத்துகளைக் கேட்டறிந்தாா். வசதிகள் மிகச் சிறப்பாக இருப்பதாக பக்தா்கள் முதல்வரிடம் திருப்தியை வெளிப்படுத்தினா். பின்னா், அவா் பக்தா்களுடன் மதிய உணவு அருந்தினாா்.

முதல்வா் சந்திரபாபு நாயுடுவின் பேரன் நாரா தேவன்ஷின் பிறந்தநாளை முன்னிட்டு, அமைச்சா் நாரா லோகேஷ் திருமலையில் ஒரு நாள் அன்னதானத்துக்காக ரூ. 44 லட்சம் நன்கொடை வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.