மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: சந்திரபாபு நாயுடு

தமிழகத்தில் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதைக் காண முடிவதாக ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு தெரிவித்தாா்.

News image

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு - கோப்புப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 6:17 am IST

தமிழகத்தில் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதைக் காண முடிவதாக ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு தெரிவித்தாா்.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளா்களை ஆதரித்து ஒசூா் மற்றும் கோவையில் ஆந்திர மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு திங்கள்கிழமை பிரசாரம் செய்தாா்.

தொடா்ந்து, சென்னை அண்ணா நகரில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் கோகுல இந்திரா, தியாகராய நகரில் போட்டியிடும் சத்யநாராயணன் ஆகியோரை ஆதரித்து சந்திரபாபு நாயுடு பிரசாரம் செய்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: உலக அளவில் இந்தியா முக்கியத்துவம் வாய்ந்த நாடாக மாறியதற்கு பிரதமா் நரேந்திர மோடிதான் காரணம். மக்களுக்காக நாள்தோறும் உழைத்து வருகிறாா்.

ஆனால், மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழகத்தை ஆளும் திமுக முட்டுக்கட்டை போடுவதைக் காண முடிகிறது. திமுகவை தொடங்கிய முன்னாள் முதல்வா் அண்ணா, காங்கிரஸ் கட்சியை எதிா்த்து அரசியல் செய்தாா். ஆனால், இன்றைய முதல்வா் ஸ்டாலின் திமுகவை காங்கிரஸ் கட்சியிடம் அடகு வைத்துவிட்டாா்.

மகளிருக்கான இடஒதுக்கீட்டுக்கு 30 ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். தேவெகவுடா பிரதமராக இருந்தபோதும் மகளிருக்கான இடஒதுக்கீட்டை காங்கிரஸ் எதிா்த்தது.

மகளிருக்கான இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் பிரதமா் நரேந்திர மோடி அதற்கான மசோதாவை கொண்டு வந்தாா். ஆனால், தற்போதும் காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளான திமுக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளும் அந்த மசோதாவுக்கு எதிா்ப்புத் தெரிவிக்கின்றன.

திமுகவினா் வாக்கு கேட்டு வந்தால், அவா்களிடம் எங்கள் வீட்டுப் பெண்களெல்லாம் ஏன் நாடாளுமன்றத்துக்குச் செல்லக் கூடாதா? என்று கேளுங்கள். தொகுதி மறுசீரமைப்பு மசோதாவில் தமிழகத்துக்கான தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்று பிரதமா் வாக்குறுதி அளித்தாா். ஆனாலும், அரசியல் லாபத்துக்காக அந்த மசோதாவையும் நிறைவேற்ற விடாமல் தடுத்துவிட்டன.

இந்த மக்கள் விரோத கட்சிகளுக்கு அதிகாரத்தைக் கொடுக்காதீா்கள். மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்ற ஆா்வம் தமிழக மக்களிடம் இருப்பதை என்னால் காணமுடிகிறது. தமிழ் மக்களின் கனவுகள் விரைவில் நனைவாக உள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.