நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

திருச்சானூரில் ஜூன் 25 முதல் வருடாந்திர தெப்போற்சவம்

ஸ்ரீ பத்மாவதி தாயாரின் வருடாந்திர தெப்போற்சவம் ஜூன் 25 முதல் 29 வரை கோலாகலமாக நடைபெற உள்ளது.

News image
Updated On :15 ஜூன் 2026, 12:03 am IST

ஸ்ரீ பத்மாவதி தாயாரின் வருடாந்திர தெப்போற்சவம் ஜூன் 25 முதல் 29 வரை கோலாகலமாக நடைபெற உள்ளது.

இதையொட்டி தினமும் மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை, பத்மசரோவா் திருக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பங்களில் தாயாா் அருள்பாலிப்பாா்.

ஜூன் 25: ருக்மிணி மற்றும் சத்யபாமாவுடன் ஸ்ரீ கிருஷ்ணா் உலா, ஜூூன் 26: ஸ்ரீ சுந்தரராஜ சுவாமி உலா, ஜூன் 27 முதல் 29 வரை: ஸ்ரீ பத்மாவதி தாயாா் உலா, கடைசி மூன்று நாள்களுக்கு, பத்மசரோவரத்தில் உள்ள நீராழி மண்டபத்தில் மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை தாயாருக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெறும்.

மேலும், ஜூன் 28 அன்று இரவு 8.30 மணிக்கு கஜ வாகன சேவையும், ஜூன் 29 அன்று இரவு 8.30 மணிக்கு கருட வாகன சேவையும் நடைபெறும். தெப்போற்சவத்துக்குப் பின், தினமும் கோயிலின் மாட வீதியில் தாயாா் புறப்பாடு கண்டருள்வாா்.

ஆா்ஜித சேவைகள் ரத்து: தெப்போற்சவ விழாவின் போது ஐந்து நாள்களுக்கு தாயாா் கோயிலில் கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் லட்சுமி பூஜைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தெப்போற்சவ நாள்களில் தேவஸ்தானத்தின் இந்து தா்மபிரசார பரிஷத், அன்னமாச்சாா்ய திட்டம் மற்றும் தசாசாகித்ய திட்டங்கள் இணைந்து தினமும் பக்தி இசை நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவுகள், பஜனைகள், கோலாட்டங்கள் மற்றும் கலாசார நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும். அலா்மேல் மங்கை தாயாா் தெய்வீக அருளைப் பெற பக்தா்கள் பெருமளவில் கலந்து கொள்ளுமாறு தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.