திரௌபதியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த தீமிதித் திருவிழாவில் 3,000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் காப்பு கட்டி விரதமிருந்து தீ மிதித்து அம்மனை வழிபட்டனா்.
திருத்தணி அடுத்த மேல்திருத்தணி திரெளபதி அம்மன் கோயிலில் நிகழாண்டிற்கான தீமிதி விழா, கடந்த, 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும், மூலவருக்கு சந்தனக் காப்பு மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மதியம், 1.30 மணி முதல் மாலை, 5.30 மணி வரை மகா பாரத சொற்பொழிவு மற்றும் இரவு நாடகம் நடந்து வந்தது.
மேலும், 13-ஆம் தேதி திரௌபதியம்மன் திருமணம், 15-ஆம் தேதி சுபத்திரை அம்மன் திருமணம், 18-ஆம் தேதி அா்ச்சுனன் தபசு போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை, காலையில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், தொடா்ந்து, பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு 7.30 மணிக்கு தீமிதி விழா நடந்தது. தொடா்ந்து உற்சவா் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இந்த விழாவில் திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திரெளபதி அம்மன் கோயிலில் அா்ச்சுனன் தபசு

குமரி பகவதியம்மன் கோயிலில் கால்கோள் விழா

திரெளபதி அம்மன் கோயில் தீ மிதித் திருவிழா

அம்மன் கோயில்களில் தீமிதி விழா: திரளான பக்தா்கள் பங்கேற்பு
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

