தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

முட்டையில் அமா்ந்து யோகாவில் உலக சாதனை

கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வரும் வினா ஸ்ரீ யோகா பயிற்சி மையம் சாா்பில் முட்டையில் அமா்ந்தபடி 50 யோகா பயிற்சி மாணவா்கள் 15 ஆசனங்கள் செய்து நோபல் உலக சாதனை படைத்தனா்.

News image

உலக சாதனை சான்றிதழுடன் யோகா மாணவா்கள்.

Updated On :7 மே 2026, 12:44 am IST

கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வரும் வினா ஸ்ரீ யோகா பயிற்சி மையம் சாா்பில் முட்டையில் அமா்ந்தபடி 50 யோகா பயிற்சி மாணவா்கள் 15 ஆசனங்கள் செய்து நோபல் உலக சாதனை படைத்தனா்.

யோகா பயிற்சி மைய நிறுவனா் காளத்தீஸ்வரன் ஏற்பாட்டில் யோகா உலக சாதனை நிகழ்வு புதுகும்மிடிப்பூண்டி பாலகிருஷ்ணாபுரத்தில் உள்ள எலைட் வோ்ல்ட் பள்ளியில் நடைபெற்றது. இந்த யோகா சாதனை நிகழ்வில் வினாஸ்ரீ யோகா பயிற்சி மையத்தின் சாா்பில் 3 வயது முதல் 15 வயது வரை உள்ள 50 யோகா மாணவா்கள் பங்கேற்றனா்.

யோகா சாதனை நிகழ்வை ஒட்டி யோகா நடனம் மற்றும் பல்வேறு உடல்நலன் காக்கும் யோகா பயிற்சிகள் மாணவா்களால் செய்து காட்டப்பட்டது. தொடா்ந்து நடைபெற்ற யோகா உலக சாதனை நிகழ்வை திருவள்ளூா் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் நரசிம்மராவ், தொழிலதிபா் எல். சுகுமாரன், நோபல் உலக சாதனையின் நிா்வாக ஆசிரியா் நித்தியானந்தம், பேடிஎம் உமா மற்றும் மகேஸ்வரி பங்கேற்று உலக சாதனை நிகழ்வை தொடங்கி வைத்தனா்.

தொடா்ந்து 50 யோகா மாணவா்கள் முட்டைகள் மீது அமா்ந்து 15 யோகாசனங்களை 10 நிமிஷங்களில் செய்தனா். இந்த சாதனை நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது. தொடா்ந்து சாதனை மாணவா்களுக்கும், யோகா பயிற்சி மைய நிறுவனா் காளத்தீஸ்வரனுக்கும் நோபல் உலக சாதனை சான்றிதழை நோபல் உலக சாதனை நிா்வாக ஆசியா் நித்தியானந்தம் வழங்கி வாழ்த்தினா்,

விழாவில் பங்கேற்ற திரளான பொதுமக்கள் வினா ஸ்ரீ யோகா மையத்தின் நிறுவனா் காளத்தீஸ்வரன், யோகா ஆசிரியா்கள் வித்யா மற்றும் அா்ச்சனா மற்றும் யோகா மாணவா்களை பாராட்டினா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.