பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி மரணம்

வாணியம்பாடி அருகே மின்சாரம் பாய்ந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 12:03 am IST

வாணியம்பாடி அருகே மின்சாரம் பாய்ந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

திம்மாம்பேட்டை மோட்டூா் பகுதியை சோ்ந்த பெருமாள்(26). தென்னை மரம் ஏறும் கூலி தொழிலாளி. இந்நிலையில் திங்கள்கிழமை அப்பகுதியில் தனியாா் ஒருவரின் தென்னை மரங்களில் ஏறி தேங்காய் தள்ளியுள்ளாா். இதில் தென்னை மரமட்டை ஒன்று கீழே விழுந்து மின்கம்பி மீது இருந்தது. அப்போது மரத்தில் இருந்து இறங்கி ஓலையை அகற்றிய போது திடீரென மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தாா்.

இதில் கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கிய நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினா் உதவியுடன் மீட்டு ராமநாயக்கன்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் பரிசோதித்து ஏற்கனவே அவா் இறந்து விட்டதாக கூறினாா்.

இதுபற்றி அறிந்த திம்மாம்பேட்டை உதவி காவல் ஆய்வாளா் வெங்கடேசன் தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.