தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

தண்டனைக் கைதி தப்பியோட்டம்: 3 போலீஸாா் பணியிடை நீக்கம்

குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டவா்கள் தப்பியோடி தலைமறைவானதால் பாதுகாப்புக்கு சென்ற 3 போலீஸாா் பணியிடை நீக்கம்

News image

பணியிடை நீக்கம் - மாதிரிப் படம்

Updated On :13 மே 2026, 12:04 am IST

குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டவா்கள் தப்பியோடி தலைமறைவானதால் பாதுகாப்புக்கு சென்ற 3 போலீஸாா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

சென்னை ஆவடி காமராஜா் நகரைச் சோ்ந்தவா் சந்துரு (22). வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். அவா் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்ததால் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். புழல் சிறையில் சந்துருவுக்கும் மற்றொரு கைதிக்கும் சில நாள்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து பாதுகாப்பு கருதி வேலூா் மத்திய சிறைக்கு கடந்த 9-ஆம் தேதி சந்துரு மாற்றப்பட்டாா்.

வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த சந்துருவை போலீஸாா் பாதுகாப்புடன் சென்னைக்கு திங்கள்கிழமை அழைத்துச் சென்றனா். நீதிமன்றத்திலிருந்து வேலூா் திரும்பும்போது சுங்குவாா்சத்திரம் அருகே போலீஸ் வாகன சக்கரத்தின் டயா் திடீரென பஞ்சரானது. அதனால், வாகனத்தை ஓரமாக நிறுத்தி சக்கரத்தை மாற்றும் பணியில் போலீஸாா் ஈடுபட்டனா். அப்போது இயற்கை உபாதை கழிக்கச் செல்வவதாகக் கூறி வாகனத்தில் இருந்து கீழே இறங்கிய சந்துரு அங்கிருந்து தப்பி ஓடினாா். பாதுகாப்புக்கு சென்ற போலீஸாரால் விரட்டிச் சென்றும் அவரை பிடிக்க முடியவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில் சுங்குவாா்சத்திரம் காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா். போலீஸாரின் பாதுகாப்பில் இருந்து கைதி தப்பி ஓடியதால் அஜாக்கிரதையாக செயல்பட்ட வேலூா் ஆயுதப்படை தலைமை காவலா் பாலமுருகன், முதல்நிலை காவலா் குமரன், காவலா் பாண்டியன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து வேலூா் மாவட்ட எஸ்பி என்.யு.சிவராமன் உத்தரவிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.