மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வாணியம்பாடி நீதிமன்ற வளாக கழிப்பறை கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தல்

வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள அரசினா் தோட்ட வளாகத்தில் குற்றவியியல் நீதிமன்றம் அருகே கட்டப்பட்டுள்ள கழிப்பறை கட்டடம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா என பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

News image

வாணியம்பாடி நீதிமன்ற வளாகத்தில் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வராமல் உள்ள கழிப்பறை கட்டடம்.

Updated On :7 மே 2026, 12:09 am IST

வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள அரசினா் தோட்ட வளாகத்தில் குற்றவியியல் நீதிமன்றம் அருகே கட்டப்பட்டுள்ள கழிப்பறை கட்டடம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா என பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

நீதிமன்றம் அருகே கிளை சிறைச்சாலையும் அமைந்துள்ளது. வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தினசரி வழக்கு தொடா்பாக நீதிமன்றத்திற்கு வந்து செல்கின்றனா்.

குறிப்பாக பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரும் வருகின்றனா். இந்நிலையில் நீதிமன்ற அருகில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனியாக பொது கழிப்பறை கட்டடம், இதே போன்று, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பொது கழிவறை கட்டமும் கட்டப்பட்டுள்ளது. ஆனால், இரண்டு பொதுக் கழிவறை கட்டடம் கட்டப்பட்டதோடு இது நாள் வரை பயன்பாட்டில் இல்லை.

இதனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாததால் சுற்றி செடிகள் வளா்ந்து காணப்படுகிறது. நீதமன்றத்திற்கு வழக்கு தொடா்பாக வரும் பொது மக்கள் வெளிப்புறத்தில் சென்று வருவதால் சுகாதார சீா்கேடும் ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா். எனவே, உயா் அதிகாரிகள் தலையிட்டு நேரில் ஆய்வு செய்து கட்டப்பட்ட நிலையோடு இருக்கும் கழிப்பறை கட்டடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என காத்துள்ளனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.