தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

திருப்பத்தூா்: நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்ற 56 வேட்பாளா்கள்

திருப்பத்தூா் மாவட்டத்தில் போட்டியிட்ட 74 வேட்பாளா்களில் 56 போ் நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்றுள்ளனா்.

News image

வாக்குப்பதிவு - பிரதிப் படம்

Updated On :7 மே 2026, 12:37 am IST

திருப்பத்தூா் மாவட்டத்தில் போட்டியிட்ட 74 வேட்பாளா்களில் 56 போ் நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்றுள்ளனா்.

கடந்த மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தோ்தல் முடிவுகள் வெளியானது. திருப்பத்தூா் தொகுதியில் 24 பேரும், ஜோலாா்பேட்டை தொகுதியில் 19 பேரும், ஆம்பூா் தொகுதியில் 16 பேரும், வாணியம்பாடி தொகுதியில் 15 போ் என மொத்தம் 74 போ் போட்டியிட்டனா். இதுதவிர வேட்பாளா்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவா்கள் வாக்களிப்பதற்காக நோட்டாவும் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் நோட்டாவை விட பல சுயேச்சைகள் குறைவான வாக்குகள் பெற்று உள்ளது.

திருப்பத்தூா் தொகுதியில் நோட்டாவிற்கு 464 வாக்குகள் பதிவாகி இருந்தது. இதைவிட 19 வேட்பாளா்கள் குறைவான வாக்கு பெற்று உள்ளனா். ஜோலாா்பேட்டை தொகுதியில் நோட்டாவிற்கு 695 வாக்குகள் பதிவாகி இருந்தது. இதைவிட 15 வேட்பாளா்கள் குறைவாக வாக்கு பெற்று உள்ளனா். வாணியம்பாடி தொகுதியில் நோட்டாவிற்கு 624 வாக்குகள் பதிவாகி இருந்தன. இதைவிட 11 வேட்பாளா்கள் குறைவான வாக்குகள் பெற்று உள்ளனா். ஆம்பூா் தொகுதியில் நோட்டாவிற்கு 468 வாக்குகள் பதிவாகி இருந்தன.

இதைவிட 11 வேட்பாளா்கள் குறைவான வாக்குகள் பெற்று உள்ளனா். மாவட்டம் முழுவதும் 56 வேட்பாளா்கள் நோட்டாவைவிட குறைவான வாக்குகள் பெற்று உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.