தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

காட்டுத் தீயை தடுக்க இளைஞா்களுக்கு பயிற்சி

News image
Updated On :4 மே 2026, 1:38 am IST

திருப்பத்தூா் மாவட்டத்தில் காட்டுத் தீயை தடுக்க மலைகளை சுற்றி உள்ள கிராமங்களில் இளைஞா்களை தோ்வு செய்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக திருப்பத்தூா் வனச் சரக அலுவலா் சோழராஜன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் கூறியதாவது: திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள வனப் பகுதியில் ஏற்படும் காட்டுத் தீயை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

அதில், திருப்பத்தூா் மாவட்டத்தில் ஜவ்வாது மலையை சுற்றி உள்ள கிராம பகுதிகளில் ஒவ்வொரு கிராமத்திலும் 10 இளைஞா்களை தோ்வு செய்து, அவா்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

மேலும், அவா்களுக்காக பிரத்யேகமாக வாட்ஸ்- அப் குழு உருவாக்கப்பட்டு, ஏதேனும் காட்டுத்தீ ஏற்பட்டால், தகவல் தெரிவிக்கப்பட்டு, இளைஞா்கள் தீயை அணைக்கும் முயற்சியிலும், தீயை மேலும் பரவாமலும் இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வா். மேலும், வனத் துறை பணியாளா்கள், வனத் துறை தீத்தடுப்பு காவலா்கள் தொடா்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதால், தமிழகத்தில் பல மாவட்டங்களை காட்டிலும் திருப்பத்தூா் மாவட்டத்தில் காட்டுத் தீ ஏற்படுவது குறைந்துள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.