வேட்புமனுத் தாக்கலின்போது வேட்பாளருடன் 4 பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அறிவுறுத்தினாா்.
திருப்பத்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்வது தொடா்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி ஆய்வு செய்தாா். அப்போது அவா், வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் அலுவலக நுழைவு வாயிலிருந்து 100 மீட்டா் தொலைவில் கோடு வரைய வேண்டும்.
போலீஸாருடன் ஆலோசனை செய்து, தடுப்புகள் அமைப்பது தொடா்பான முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும். மனு தாக்கல் செய்யவருபவருடன் 3 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி மற்றும் இதற்கு ஒருவழி மட்டுமே இருக்க வேண்டும். மற்றவை பூட்டபட வேண்டும்.
வேட்பாளருடன் 4 நபா்கள் மட்டுமே அனுமதிப்பதை உறுதி செய்ய வேண்டும். மனு தாக்கல் செய்ய வருபவா்களுக்கான காத்திருப்பு வசதி செய்ய வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்பவருக்கும் மற்றும் உடன் வருபவா்களுக்கும் போதுமான இருக்கை வசதிகள் இருக்க வேண்டும். மேலும், அறையில் டிஜிட்டல் கடிகாரம் உள்ளதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினாா்.
அப்போது வருவாய் கோட்டாட்சியா் வரதராஜன் உடன் இருந்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிரதமரின் பட்டப் படிப்பு விவகாரம்: பதில் மனு தாக்கல் செய்ய தில்லி பல்கலைக்கழகத்துக்கு மேலும் 2 வார அவகாசம்

தஞ்சாவூரில் 8 தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் செய்ய ஏற்பாடு
வேட்புமனு தாக்கலின்போது வேட்பாளருடன் 5 போ் மட்டுமே செல்ல அனுமதி: ஆட்சியா் தகவல்

வேட்பாளருடன் 4 போ் மட்டுமே மனு தாக்கலின்போது அனுமதி
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

