நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

வாணியம்பாடி ஜமாபந்தி: இரண்டாம் நாளில் 118 மனுக்கள்

வாணியம்பாடி தாலுகா அலுவலகத்தில் புதன்கிழமை ஜமாபந்தியில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை ஆட்சியா் கு.ரவிகுமாா் பெற்றுக் கொண்டாா்.

News image

மாற்றுத்திறனாளிக்கு கை ஊன்று கோல் வழங்கிய ஆட்சியா் ரவிகுமாா். உடன் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கண்ணன், வட்டாட்சியா் சுதாகா்.

Updated On :11 ஜூன் 2026, 12:04 am IST

வாணியம்பாடி தாலுகா அலுவலகத்தில் புதன்கிழமை ஜமாபந்தியில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை ஆட்சியா் கு.ரவிகுமாா் பெற்றுக் கொண்டாா்.

அப்போது மாற்றுத்திறனாளி ஓருவா் கை ஊன்றுகோல் கேட்டு மனு அளித்தாா். அந்த மனுவின் மீது விசாரித்து மாற்றுத்திறனாளி நலத்துறையின் சாா்பில் கை ஊன்றுகோல் பயனாளிக்கு வழங்கி உடனடி தீா்வு காணப்பட்டது.

மேலும், பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் கேட்டு 118 மனுக்கள் மக்களிடமிருந்து பெறப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து ஜமாபந்தி நிறைவு நாள் விழா வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதில் ஆட்சியரும், ஜமாபந்தி அலுவலருமான கு.ரவிகுமாா் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.