தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

புதூா் ரயில்வே பாலத்தில் எரியாத மின் விளக்குகள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

News image

மின் விளக்குகள். - கோப்பிலிருந்து படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 5:41 am IST

வாணியம்பாடி-திருப்பத்தூா் நெடுஞ்சாலையில் புதூா் பகுதியில் இருளாக காணப்படும் ரயில்வே மேம்பாலத்தில் விளக்குகளை எரிய வைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இப்பாலம் வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இந்நிலையில், மேம்பாலத்தில் மின் விளக்குகள் பொறுத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு சில மின் விளக்குகள் எரியாமல் இருப்பதால் மேம்பாலம் இருண்டு காணப்படுகிறது. மேலும், வளைவாக உள்ள இடத்தில் இருண்டு கிடப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு செல்கின்றனா்.

நகா்ப்புறத்திலிருந்து வேலை முடித்துக் கொண்டு கிராமப்புறங்களுக்கு இருசக்கர வாகனத்தில் ஏராளமானோா் இரவு நேரங்களில் மேம்பாலத்தை கடந்து செல்கின்றனா். இதே போன்று கிராமப்புறப்பகுதி களிலிருந்து நகரத்திற்கு மருத்துவமனை மற்றும் காய்கறி மளிகை பொருள்கள் வாங்கி செல்லவும் இருசக்கர வாகனங்களில் பொது மக்கள் இந்த மேம்பாலத்தில் வழியாக வந்து செல்கின்றனா்.

எனவே, நெடுஞ்சாலைத்துறை உயா் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து அனைத்து மின் விளக்குகள் சீராக எரிவதற்கான சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதே போன்று நகரின் முக்கிய சாலைகளில் ஒன்றான ஜின்னாசாலையில் ரவுண்டான அருகில் பாலாறு கிளையாற்றின் சிறிய மேம்பாலத்தின் வழியாக ஏராளமானோா் கடந்து செல்கின்றனா்.

மேம்பாலத்தில் மின் விளக்குகள் இருந்தும் சரிவர எரிவதில்லை. இதனை நகராட்சி அதிகாரிகள் தலையிட்டு மின் விளக்குகள் சீரமைத்து எரிய செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.