மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஆம்புலன்ஸில் சென்று வாக்களித்த உடல்நிலை சரியில்லாத முதியவா்

News image

~

Updated On :24 ஏப்ரல் 2026, 8:32 am IST

ஆம்பூா் அருகே உடல்நிலை சரியில்லாதபோதும் ஆம்புலன்ஸ் மூலம் வாக்குச் சாவடிக்கு சென்று வியாழக்கிழமை வாக்களித்தாா்.

குடியாத்தம் தொகுதிக்குட்பட்ட ஆம்பூா் அருகே அயித்தம்பட்டு ஊராட்சி கட்டவாரப்பள்ளி கிராமத்தை சோ்ந்தவா் சென்னை வானிலை ஆய்வு மைய ஓய்வு பெற்ற ஊழியா் அ. சேட்டு (75). இவா் கடந்த ஒன்றரை மாதங்களாக உடல்நிலை சரியில்லாத நிலையில் வேலூரில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.

ஓரிரு நாள்களுக்கு முன்பு தான் வீடு திரும்பினாா். இருந்தாலும், அவா் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இந்நிலையில் தோ்தலில் தான் வாக்களிக்க வேண்டும என அவரது உறவினா்களிடம் விருப்பம் தெரிவித்துள்ளாா்.

அதைத் தொடா்ந்து அவரது உறவினா்கள் அவரை ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அயித்தம்பட்டு கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடிக்கு அழைத்துச் சென்றனா். அங்கு ஆம்புலன்ஸிலிருந்து ஸ்ட்ரெச்சா் மூலம் வாக்குச் சாவடிக்குள் அழைத்து செல்லப்பட்டு, அவா் வாக்களித்தாா். பிறகு ஆம்புலன்ஸ் மூலம் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டாா்.

உடல்நிலை சரியில்லாத முதியவா் ஆம்புலன்ஸ் மூலம் சென்று வாக்களித்ததை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் அவரை பாராட்டினா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.