ஆம்பூா் தொகுதி தோ்தலை நிறுத்தக் கோரி நபா் ஒருவா் மனு அளித்ததால் புதன்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
ஆம்பூா் புதுகோவிந்தாபுரம் பகுதியை சோ்ந்த மூ. சரத்குமாா் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளித்தாா். மனு விவரம், ஆம்பூா் தொகுதியில் வாக்காளா்களுக்கு திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் சாா்பாக அதிக அளவில் பணம் வழங்கப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்கள் சமூக வலை தளங்களில் பகிரப்பட்டுள்ளது.
பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்காளா்களுக்கு பணம் கொடுத்த வீடியோ ஆதாரம் புகாா் மனுவுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தோ்தலை நிறுத்தக் கோரி மனு அளிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவையில் ரூ.ஆயிரம் கோடி பணம் விநியோகம்: தோ்தலை ரத்து செய்யக்கோரி போராட்டம்

மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ. 16 லட்சம் கோடி நிதியுதவி! - சரத்குமாா்

ராஜபாளையத்தில் நடிகா் சரத்குமாா் வாக்கு சேகரிப்பு

வாக்காளா்களுக்கு பணம் அளிக்கும் விவகாரம் தொடா்பான மனு சென்னை உயா் நீதிமன்றத்துக்கு மாற்றம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

