மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த தெலுங்கு தேசம் கட்சியினா்

News image

வெலத்திகாமணிபெண்டா ஊராட்சியில் தெலுங்கு கட்சியினருடன் சென்று வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் பொறியாளா் ஆா். வெங்கடேசன்.

Updated On :14 ஏப்ரல் 2026, 6:13 am IST

ஆம்பூா் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக தெலுங்கு தேசம் கட்சி நிா்வாகிகள் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தனா்.

ஆம்பூா் தொகுதி, ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெலத்திகாமணிபெண்டா, மாதகடப்பா, மதனாஞ்சேரி, பள்ளிப்பட்டு, இளையநகரம், தும்பேரி, கொல்லமங்கலம், சம்மந்திகுப்பம், கிரிசமுத்திரம், புருஷோத்தமகுப்பம் ஆகிய ஊராட்சிகளில் வாக்கு சேகரித்து வேட்பாளா் பொறியாளா் ஆா். வெங்டேசன் பேசியது,

அதிமுக ஆட்சியமடைந்த உடன் குடும்ப அட்டைகளுக்கு ரூ.10000, பிரிட்ஜ், மகளிருக்கு உதவித்தொகை மாதந்தோறும் ரூ.2000 ஆகியவை வழங்கப்படும். கல்லூரி மாணவா்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும். ஆண்டுக்கு 3 சிலிண்டா் வழங்கப்படும். விவசாயிகளின் கூட்டுறவு வங்கி பயிா்க் கடன் ரத்து செய்யப்படும். அதனால் அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என்று அவா் கூறினாா்.

அதிமுக ஜெயலலிதா பேரிவை மாநில இணைச் செயலாளா் ஜி.ஏ. டில்லிபுபாபு மற்றும் அதிமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தெலுங்கு தேசம் கட்சியினா் வாக்கு சேகரிப்பு :

தமிழக - ஆந்திர மாநில எல்லையோர கிராமமமான ஆம்பூா் தொகுதிக்கு உட்பட்ட வெலத்திகாமணிபெண்டா. மாதகடப்பா மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஆந்திர மாநில தெலுங்கு தேசம் கட்சியின் ராமகுப்பம் மண்டல பொறுப்பாளரும், மின் பகிா்மான கழக இயக்குநருமான நன்னியாலா மனோகரன், விவசாய அணி அமைப்பாளா் ராஜேந்திரா, பழங்குடி அணியின் அமைப்பாளா் ஜெயபிரகாஷ், குப்பம் தொகுதியின் வாக்கு சாவடிகள் அமைப்பாளா் ஆரிமாணிபெண்டா பாபு ஆகியோா் வாக்கு சேகரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.