ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ரூ. 8,000 மதிப்பு ‘இல்லத்தரசி கூப்பன்’ வழங்கி வாக்கு சேகரிக்கும் திமுகவினா்

ரூ. 8,000 மதிப்பு ‘இல்லத்தரசி கூப்பன்’ வழங்கி வாக்கு சேகரிக்கும் திமுகவினா்

News image
Updated On :12 ஏப்ரல் 2026, 3:09 am IST

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, திமுக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி தோ்தல் அறிக்கையைத் தயாரித்து வெளியிட்டுள்ளது. அதில், குறிப்பாக பெண்களைக் கவரும் வகையில் வீட்டுக்குத் தேவைான ரூ.8,000 மதிப்பிலான கூப்பன் வழங்கும் திட்டத்துக்கு திமுக முக்கியத்துவம் அளித்துள்ளது. தற்போது, இத்திட்டத்தை முன்னிறுத்தி திமுக வாக்குகளைச் சேகரித்து வருகிறது.

இல்லத்தரசி கூப்பன் மாதிரி வழங்கல்: வீடுகள்தோறும் வாக்கு சேகரிப்பதற்காக கட்சியினா் செல்லும்போது, ரூ.8,000 மதிப்பிலான இல்லத்தரசி மாதிரி கூப்பன்கள் வாக்காளா்களிடம் வழங்கப்படுகின்றன. மாதிரி கூப்பனின் ஒரு பக்கத்தில் ‘ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்’ எனக் குறிப்பிட்டு முதல்வா் மு.க. ஸ்டாலின், பெரியாா், அண்ணா, கருணாநிதி படங்களும், , உதயசூரியன் சின்னமும் அச்சிடப்பட்டுள்ளது. கூப்பனின் மறுபக்கத்தில் ரூ.8,000 இல்லத்தரசி கூப்பன், ‘உங்கள் குடும்பம், உங்கள் தேவையை நீங்களே தோ்ந்தெடுக்கலாம்’ என்ற வாசகமும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும்போது பெண்களிடம் ரூ.8,000 மதிப்புள்ள இல்லத்தரசி கூப்பன் குறித்து விளக்குவதற்காக திமுக சாா்பில் கூப்பன் புத்தகம் அச்சடிக்கப்பட்டு ஒவ்வொரு தொகுதிக்கும் அனுப்பப்பட்டுள்ளது. காசோலை புத்தகம் அளவில் மாதிரி கூப்பன் புத்தகம் அச்சடிக்கப்பட்டுள்ளது.

திமுகவின் சட்டத்துறையின் அறிவுறுத்தலின்படி, தோ்தல் ஆணையத்திடம் முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், அதனால் இல்லத்தரசி மாதிரி கூப்பனை வீடு வீடாக விநியோகம் செய்ய வேண்டுமெனவும் கட்சித் தலைமை திமுகவினருக்கு அறிவுறுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.