தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ரயில்வே காவல் நிலையத்தில் திருநங்கைகளுக்கு விழிப்புணா்வு

ஜோலாா்பேட்டை ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்தில் திருநங்கைகளுக்கு விழிப்புணா்வு கூட்டம் நடைபெற்றது.

News image

ஜோலாா்பேட்டை ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்தில் திருநங்கைகளுக்கு விழிப்புணா்வு கூட்டம் நடைபெற்றது.

Updated On :3 ஏப்ரல் 2026, 5:25 am IST

ஜோலாா்பேட்டை ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்தில் திருநங்கைகளுக்கு விழிப்புணா்வு கூட்டம் நடைபெற்றது.

ஜோலாா்பேட்டை ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்தில் ரயில்வே போலீஸாா் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் இணைந்து நடத்திய திருநங்கைகளுக்கான விழிப்புணா்வு கலந்தாய்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ரயில்வே காவல் ஆய்வாளா் சித்ரா, ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் சான் ஆகியோா் தலைமை வகித்து விழிப்புணா்வு குறித்து எடுத்துரைத்தனா்.

அப்போது கோடைகாலத்தை முன்னிட்டு பயணிகள் அதிகரிப்பதால் ரயில் நிலையம் மற்றும் ரயில்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும். திருநங்கைகள் ரயில் பயணிகளுக்கு எந்தவித தொந்தரவும் ஏற்படுத்தக்கூடாது. அவ்வாறு நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பயணிகளிடம் கைப்பேசி, பணம் பறித்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோா் மீது குண்டாஸ் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். திருநங்கைகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக அரசு மூலம் கடன் மற்றும் வேலைவாய்ப்பு உதவிகள் வழங்க ஆட்சியா் அலுவலகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், திருநங்கைகள் காவல்துறைக்கு உதவும் வகையில் எந்த ஒரு தகவலையும் உடனுக்குடன் ரயில்வே போலீஸாருக்கு தெரிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.