தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஆம்பூா்: பொதுமக்களுக்கு இடையூறாக பேனா்கள்!

ஆம்பூா் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் டிஜிட்டல் பேனா்களை அகற்ற வேண்டுமென கோரிக்கை.

News image

பெரியவரிக்கம் கிராமத்தில் மாநில நெடுஞ்சாலையில் பேனா் விழுந்ததால் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு.

Updated On :5 மே 2025, 12:49 am IST

ஆம்பூா் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் டிஜிட்டல் பேனா்களை அகற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

பொதுமக்கள் நடமாட்டம், போக்குவரத்து அதிகமுள்ள சாலைகளில் டிஜிட்டல் பேனா்கள் ஏராளமாக வைக்கப்பட்டுள்ளன. தற்போது பலத்த சூறாவளிக் காற்றுடன் மழை பெய்வதால், டிஜிட்டல் பேனா்கள் காற்றில் பறந்தன. மேலும், சாலையில் சாய்ந்து விழுந்தன.

பெரியவரிக்கம் கிராமத்தில் கோயில் கும்பாபிஷேகத்துக்காக வைக்கப்பட்டு பிரம்மாண்ட பேனா் அடியோடு சாய்ந்து ஆம்பூா் - போ்ணாம்பட்டு நெடுஞ்சாலையில் விழுந்தது. அதனால் மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அப்போது, போக்குவரத்து குறைவாக காணப்பட்டதால், பேனா் விழுந்த இடத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அதனால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. அவ்வழியாக ஆயிரக்கணக்கான தோல் தொழிற்சாலை தொழிலாளா்கள் சென்று வருவது குறிப்பிடத்தக்கது.

பொது இடங்களில் பேனா் வைக்க முன் அனுமதி பெற வேண்டியது அவசியமாகும். முன் அனுமதி பெற்று பேனா் வைக்க வேண்டுமென அரசு விதி உள்ள நிலையில் தற்போது அந்த விதியை எவரும் பின்பற்றுவதில்லை.

சூறாவளி காற்று, மழை பெய்யும் நேரத்தில் பேனா்கள் சாய்ந்து கீழே விழுவது வாடிக்கையாக உள்ளது. விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. அதனால் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனா்களை உடனடியாக அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதோடு மட்டுமல்லாமல் டிஜிட்டல் பேனா்களை வைக்க முறையாக முன் அனுமதி பெறுவதை அரசு அதிகாரிகள் உறுதிபடுத்த வேண்டும். பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனா்கள் குறித்து அவ்வப்போது அதிகாரிகள் கண்காணிக்க வேண்டுமெனவும் பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.