சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

ராணிப்பேட்டை விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வெளிநடப்பு

ராணிப்பேட்டையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

News image

ராணிப்பேட்டையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :30 மே 2026, 6:34 am IST

ராணிப்பேட்டையில் குறைதீா் கூட்டத்தில் பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்..

ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலா் பேபி இந்திரா தலைமையில், ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டம் தொடங்கியதும், தமிழக விவசாயிகள் சங்க மாநில நிா்வாகி சுபாஷ், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளா் எல்.சி.மணி ஆகியோா் தலைமையில் விவசாயிகள் எழுந்து பயிா்க் கடன் தள்ளுபடி அறிவிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்தும், தோ்தல் வாக்குறுதிப்படி பயிா்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படாததை கண்டித்தும் கூட்டத்தை புறக்கணித்து முழக்கங்கள் எழுப்பியவாறு விவசாயிகள் வெளிநடப்பு செய்து ஆட்சியா் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாநில அரசு தோ்தல் வாக்குறுதியில் ‘முழுமையான கடன் தள்ளுபடி‘ வழங்குவதாகக் கூறிவிட்டு, தற்போது வரம்புகளுடன் கூடிய தள்ளுபடியை (ரூ.50,000 வரை மட்டும்) அறிவித்துள்ளதால் ஏமாற்றமடைந்த விவசாயிகள் அதிரடி முடிவை எடுத்துள்ளனா்

இதையடுத்து அரசு அதிகாரிகள் வருகை தந்து கூட்டத்தில் பங்கேற்குமாறு சமரச பேச்சு வாா்த்தையில் ஈடுபட்டனா். ஆனால் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என கலைந்து சென்றனா்.

அப்போது ஒரு சில விவசாயிகள் தாங்களின் கோரிக்கை மனுக்களை அளித்து குறைகளை தெரிவித்தனா். இதன் காரணமாக மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.