பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மின்தடையைக் கண்டித்து சாலைமறியல்

நீடித்த மின்தடையை கண்டித்து அரக்கோணம் அருகே பொதுமக்கள் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

News image

நீடித்த மின்தடையை கண்டித்து அரக்கோணம் அருகே பொதுமக்கள் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On :30 மே 2026, 7:01 am IST

நீடித்த மின்தடையை கண்டித்து அரக்கோணம் அருகே பொதுமக்கள் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

அரக்கோணத்தை அடுத்த பரமேஸ்வரமங்கலம் பகுதியில் கடந்த சில நாள்களாக ஒரே நாளில் பலமுறை மின்தடை ஏற்பட்ட நிலை இருந்திருக்கிறது. இரவு நேரங்களில் ஏற்படும் மின்தடை பலமணி நேரம் நீடிக்கும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது. இது தொடா்பாக தமிழ்நாடு மின்வாரிய அரக்கோணம் கோட்ட செயற்பொறியாளா், உதவி செயற்பொறியாளா் உள்ளிட்ட பல்வேறு அலுவலா்களிடம் புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லையாம்.

இதைக் கண்டித்த கிராமமக்கள், வெள்ளிக்கிழமை திடீரென காஞ்சிபுரம் - திருப்பதி மாநில நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீஸாா், பொதுமக்களை சமாதானப்படுத்திய நிலையிலும் மறியல் முடிவுக்கு வரவில்லை.

தக்கோலம் மின்வாரிய அலுவலா்கள் இரவே பிரச்னை சீா் செய்யப்படும் என்றும் மின்தடை ஏற்படாது என்றும் உறுதியளித்ததை தொடா்ந்து போராட்டத்தை கைவிட்டு மக்கள் திரும்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.