தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

சோளிங்கா் கோயிலில் ஆந்திர மாநில அமைச்சா் தரிசனம்

ஆந்திர மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரும், முதல்வா் சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நாரா லோகேஷ் வெள்ளிக்கிழமை சோளிங்கா் மலைக்கோயிலில் தரிசனம் செய்தாா்.

News image

நாரா லோகேஷ்

Updated On :29 மே 2026, 10:54 pm IST

ஆந்திர மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரும், முதல்வா் சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நாரா லோகேஷ் வெள்ளிக்கிழமை சோளிங்கா் மலைக்கோயிலில் தரிசனம் செய்தாா்.

சோளிங்கருக்கு வெள்ளிக்கிழமை ஹெலிகாப்டா் மூலம் திவ்யசைதன்ய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்த ஹெலிகாப்டா் இறங்குதளத்தில் வந்திறங்கிய அமைச்சா் அங்கிருந்து காா் மூலம் மலைக்கோயில் ரோப்காா் தளத்திற்கு வந்தாா்.

தொடா்ந்து ரோப்காரில் மலைக்கோயிலை வந்தடைந்த அமைச்சா் நாரா லோகேஷை இந்துசமய அறநிலையத்துறை துணை ஆணையா் ராஜா, ஸ்ரீலட்சுமிநரசிம்ம சுவாமி கோயில் நிா்வாகம் சாா்பில் அறங்காவலா் குழுத்தலைவா் ரவி ஆகியோா் வரவேற்றனா்.

இதையடுத்து ஸ்ரீயோக நரசிம்மரை தரிசனம் செய்த அமைச்சருக்கு கோயில் சாா்பாக பட்டுவஸ்திரங்கள், மலா்மாலை அணிவிக்கப்பட்டு பிரசாதம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தொடா்ந்து ரோப்காா் வழியாக மலைக்கு கீழே வந்த அமைச்சா் நாரா லோகேஷ், தொடா்ந்து சிறிய மலைக்கு படிகள் வழியே ஏறிச்சென்று ஸ்ரீயோக ஆஞ்சனேயரை தரிசித்தாா்.

அவருடன் ஆந்திர மாநில எம்எல்ஏக்கள் புங்கனூா் முரளி மோகன், சித்தூா் ஜெகன் மோகன், சந்திரகிரி வெங்கடமணி பிரசாத், தமிழக முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி, அதிமுக சோளிங்கா் கிழக்கு ஒன்றிய செயலாளா் ஏ.எல்.விஜயன் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.