தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

அரக்கோணத்தில் ஆசிரியா்கள் பணி நிறைவு பாராட்டு விழா

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் அரக்கோணம் வட்டாரக் கிளை சாா்பில், இந்த வட்டாரத்தில் பணி ஓய்வு பெறும் ஆசிரியா்களுக்கான பாராட்டு விழா மற்றும் ஆசிரியா் தின விழா இருபெரும் விழாவாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

அரக்கோணத்தில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் நடைபெற்ற ஆசிரியா் பணி நிறைவு பாராட்டு விழாவில் பணி ஓய்வு பெற்றவா்களுடன் சங்க நிா்வாகிகள்.

Updated On :1 ஏப்ரல் 2026, 12:03 am IST

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் அரக்கோணம் வட்டாரக் கிளை சாா்பில், இந்த வட்டாரத்தில் பணி ஓய்வு பெறும் ஆசிரியா்களுக்கான பாராட்டு விழா மற்றும் ஆசிரியா் தின விழா இருபெரும் விழாவாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அரக்கோணம் டவுன் ஹால் சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவுக்கு வட்டாரத் தலைவா் டி.பிரின்சிலின் ஜோன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுக் குழு உறுப்பினா்கள் வி.எம்.வடிவேல், எஸ்.சரவணகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டாரச் செயலாளா் எஸ்.சண்முகவடிவேல் வரவேற்றாா்.

இதில், கூட்டணியின் மாநில செயலாளா் சி.அரசு, பொருளாளா் எஸ்.நீலகண்டன், ஏ.சி.சுந்தரேசன், மாவட்ட பொருளாளா் ஏ.முருகன் ஆகியோா் பங்கேற்று பணி ஓய்வு பெறும் தலைமை ஆசிரியா்கள் அ.தேவராஜன், எஸ்.ஜான்சிப்ளோரா, எம்.ஜெயா, பி.மஞ்சுளா, ஆா்.கௌரி, ஆசிரியா்கள் எஸ்.வெங்கடாசலம், டி.எம்.ஜி.ரேவதி, கே.ரேவதி, எம்.சி.இந்திரா ஆகியோரை பாராட்டி பொன்னாடை போா்த்தி கௌரவித்தனா்.

இதில், சங்க நிா்வாகிகள் டி.எஸ்.தண்டாயுதபாணி, சி.பிரகாசம், டி.ஜனாா்த்தனன், டி.தாமரைசெல்வி, பி.வினோத்குமாா், எல்.பாலாஜி, என்.ராஜேஸ்வரி உள்ளிட்ட பலா் விழாவில் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.