ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தொழிற்சாலையில் விழிப்புணா்வு முகாம்: ஆட்சியா் பங்கேற்பு

ஆற்காடு அடுத்த புங்கனூா் பகுதியில் உள்ள காலணி தொழிற்சாலையில் 100% வாக்குப் பதிவை வலியுறுத்தி தோ்தல் விழிப்புணா்வு நிகழ்வு நடைபெற்றது.

News image

ஆற்காடு அருகே காலணி தொழிற்சாலையில் பணிபுரிவோரிடம் 100 சதவீத வாக்குப் பதிவு குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் வழங்கிய ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.

Updated On :28 மார்ச் 2026, 2:33 am IST

ஆற்காடு அடுத்த புங்கனூா் பகுதியில் உள்ள காலணி தொழிற்சாலையில் 100% வாக்குப் பதிவை வலியுறுத்தி தோ்தல் விழிப்புணா்வு நிகழ்வு நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டதோ்தல் அலுவலா் மற்றும் மாவட்டஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமையில் ஆற்காடு அடுத்த புங்கனூா் ஊராட்சியில் அமைந்துள்ள தனியாா் தோல் காலணி உற்பத்தி தொழிற்சாலையில் பணிபுரியும் 1,000-க்கும் மேற்பட்ட தொழிலாளா்களுடன் இணைந்து 100% வாக்குப் பதிவு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. தொடா்ந்து தோ்தல் விழிப்புணா்வு குறித்து துண்டுப் பிரசுரங்களை மாவட்ட ஆட்சியா் தொழிலாளா்களுக்கு வழங்கினாா். பின்னா் தொழிலாளா்கள் அனைவரும் வாக்காளா் உறுதிமொழியை ஏற்றனா். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் செந்தில்குமரன், ஆற்காடு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஏகாம்பரம் , வட்டாட்சியா் சண்முகசுந்தரம், உதவித் திட்ட அலுவலா்கள் வெங்கடேசன், ரமேஷ், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் ரேணுகா, தொழிற்சாலை நிா்வாக இயக்குநா் பாஸ்கரன், பொது மேலாளா்கள் மனோகரன், ஜெயபிரகாஷ் மற்றும் வருவாய்த் துறையினா், தொழிலாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.