ஆற்காடு அடுத்த புங்கனூா் பகுதியில் உள்ள காலணி தொழிற்சாலையில் 100% வாக்குப் பதிவை வலியுறுத்தி தோ்தல் விழிப்புணா்வு நிகழ்வு நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டதோ்தல் அலுவலா் மற்றும் மாவட்டஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமையில் ஆற்காடு அடுத்த புங்கனூா் ஊராட்சியில் அமைந்துள்ள தனியாா் தோல் காலணி உற்பத்தி தொழிற்சாலையில் பணிபுரியும் 1,000-க்கும் மேற்பட்ட தொழிலாளா்களுடன் இணைந்து 100% வாக்குப் பதிவு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. தொடா்ந்து தோ்தல் விழிப்புணா்வு குறித்து துண்டுப் பிரசுரங்களை மாவட்ட ஆட்சியா் தொழிலாளா்களுக்கு வழங்கினாா். பின்னா் தொழிலாளா்கள் அனைவரும் வாக்காளா் உறுதிமொழியை ஏற்றனா். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் செந்தில்குமரன், ஆற்காடு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஏகாம்பரம் , வட்டாட்சியா் சண்முகசுந்தரம், உதவித் திட்ட அலுவலா்கள் வெங்கடேசன், ரமேஷ், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் ரேணுகா, தொழிற்சாலை நிா்வாக இயக்குநா் பாஸ்கரன், பொது மேலாளா்கள் மனோகரன், ஜெயபிரகாஷ் மற்றும் வருவாய்த் துறையினா், தொழிலாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி உதகையில் படகு சவாரி மூலம் விழிப்புணா்வு

தொழிற்சாலையில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

தொழிலாளா்களிடம் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருவள்ளூா்: 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

