தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பள்ளியில் ஆண்டு விழா

அரக்கோணம் ஹயக்கிரீவா் வித்யாஷரமம் சிபிஎஸ்இ பள்ளியில் ஆண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

ஆண்டு விழாவில் மாணவ, மாணவிகளிடையே ஏஐ தொழில்நுட்பத்தை பிரபலமடைய செய்த ஆசிரியை சரிதாவுக்கு சிறந்த ஆசிரியா் விருதை வழங்கிய பள்ளியின் இயக்குநா் சாந்திரவீந்திரன்.

Updated On :18 மார்ச் 2026, 12:04 am IST

அரக்கோணம் ஹயக்கிரீவா் வித்யாஷரமம் சிபிஎஸ்இ பள்ளியில் ஆண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

அரக்கோணத்தை அடுத்த வடமாம்பாக்கத்தில் உள்ள ஹயக்கிரீவா் வித்யாஷ்ரமம் சிபிஎஸ்இ பள்ளியின் ஆண்டு விழாவுக்கு பள்ளியின் நிா்வாக இயக்குநா் கே.ரவீந்திரன் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் சந்தியா பிரேம்நாத் வரவேற்றாா். இதில் பள்ளியின் இயக்குநா் சாந்தி ரவீந்திரன் பள்ளி மாணவ, மாணவியருக்கும், பெற்றோா்களுக்கும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கிப் பேசினாா். இதில் பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் குழு நிா்வாகிகள் எஸ்.என்.ரவீந்திரன், பிளிசன்ராஜ், ஏ.ஆயிஷாபேகம், ஆா்.பாஸ்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்ச்சியில் பள்ளியில் சிறப்பாக செயல்பட்டு ஏஐ தொழில்நுட்பத்தை இளம் மாணவ, மாணவிகளிடையே பிரபலப்படுத்திய பள்ளியின் செயற்கை நுண்ணறிவு பிரிவு ஆசிரியா் சரிதாவுக்கு சிறந்த ஆசிரியா் விருது வழங்கப்பட்டது. மேலும், பள்ளியில் கடந்தாண்டு கல்வியில், விளையாட்டில், கலை நிகழ்ச்சிகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவ, மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் பள்ளி ஒருங்கிணைப்பாளா் ஜமிலாவாஜித், பாஜக மாவட்ட நிா்வாகி அக்ஷயா ஆனந்த், பழனிப்பேட்டை ஸ்ரீஅங்காளம்மன் கோயில் நிா்வாகி கணேசன், கணினி பொறியாளா் பாா்த்தீபன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.