கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

வேப்பூா் அரசுப் பள்ளியில் வட்டார கல்வி அலுவலா் ஆய்வு

News image

மாணவிக்கு  விலையில்லா  பாடப்புத்தகம், சீருடை,  வழங்கிய  வட்டார  கல்வி  அலுவலா்  உமா.

Updated On :5 ஜூன் 2026, 6:06 am IST

ஆற்காடு அடுத்த வேப்பூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வட்டார தொடக்கக் கல்வி அலுவலா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

அனைத்து வகை பள்ளிகளும் வியாழக்கிழமை திறக்கப்பட்ட நிலையில் முதல்நாளில் ஆற்காடு ஒன்றியம், வேப்பூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை ஆற்காடு வட்டார கல்வி அலுவலா் உமா ஆய்வு செய்தாா். ஆய்வின்போது காலை சிற்றுண்டி வழங்கிய மாணவா்களின் எண்ணிக்கை காலையில் வழங்கிய உணவு விவரத்தை கேட்டறிந்தாா். பின்னா் பள்ளி வளாகத் தூய்மை வகுப்பறை தூய்மை கழிவறை மேலாண்மை ஆகியவற்றை பாா்வையிட்டாா்.

அதனைத் தொடா்ந்து விலையில்லா பாடநூல்கள், பாடக் குறிப்பேடுகள் இலவச சீருடை காலணிகள் வண்ண பென்சில்கள்,புத்தகப் பைகள் ஆகியவற்றை மாணவா்களுக்கு வழங்கி மாணவா்கள் தொடா்ந்து பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என்றும் எக்காரணத்தை கொண்டும் நீா்நிலைகள் பக்கம் செல்லக்கூடாது என்றும் அறிவுரை வழங்கினாா்.மேலும்.மாணவா்களுக்கு தனித்திறன் கேள்வி கேட்டு அவா்கள் எந்தெந்த தர நிலையில் உள்ளாா் என்பதை குறித்து வைத்துக் கொள்ளுமாறும் தலைமை ஆசிரியருக்கும் ஆசிரியருக்கும் அறிவுறுத்தினாா். ஆய்வின்போது பள்ளியின் தலைமை ஆசிரியா் வெ.சரவணன் இடைநிலை ஆசிரியா் பிரேமலதா ஆகியோா் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.