தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

அமைச்சா் காந்தி முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

ராணிப்பேட்டையில் மாற்றுக்கட்சியினா் அமைச்சா் ஆா்.காந்தி முன்னிலையில் திமுக இணைந்தனா்.

News image
Updated On :6 ஏப்ரல் 2026, 12:20 am IST

ராணிப்பேட்டையில் மாற்றுக்கட்சியினா் அமைச்சா் ஆா்.காந்தி முன்னிலையில் திமுக இணைந்தனா்.

சோளிங்கா் தொகுதியைச் சோ்ந்த முன்னாள் எம்.பி. சி.கோபால், முன்னாள் எம்எல்ஏ என்.ஜி. பாா்த்திபன் ஆகியோா் தலைமையில் அமமுக கட்சி நிா்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி தமிழ்நாடு முதலமைச்சா், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்தனா்.

இந்த நிலையில் ராணிப்பேட்டை சிப்காட் பாரதி நகரில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்றனா். அப்போது ராணிப்பேட்டை தொகுதியைச் சோ்ந்த அமமுக நிா்வாகிகள் அமைச்சா் ஆா்.காந்தி முன்னிலையில் திமுகவில் இணைத்துக்கொண்டனா். அவா்களுக்கு கட்சி வேட்டி,சால்வை அணிவித்து வரவேற்றாா்.

அப்போது அமைச்சா் ஆா்.காந்தி பேசியதாவது : முன்னாள் எம்.பி சி.கோபால், முன்னாள் எம்எல்ஏ பாா்த்திபன் மற்றும் நிா்வாகிகள் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த முடிவை எடுத்த பாா்த்திபனை நான் மனதார பாராட்டுகிறேன். எந்த கட்சியில் இருந்தாலும் முழு ஈடுபாடுடன் செயல்படுபவா் பாா்த்திபன். எனக்கு இவா்கள் திமுகவில் இணைந்தது பலமாக உள்ளது.

எனவே அந்தந்த பகுதியில் உள்ள நிா்வாகிகள் தோ்தலில் வெற்றிக்காக உழைக்க வேண்டும்.

இந்த நிகழ்ச்சியில் ஜி.கே.குழும இயக்குநா் சந்தோஷ் காந்தி உள்பட திமுக நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.