ராணிப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிட 7-ஆவது முறையாக அமைச்சா் ஆா்.காந்திக்கு திமுக தலைமை வாய்ப்பு வழங்கியுள்ளது. முன்னதாக, இத்தொகுதியில் அவரது மகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஆா்.காந்தி தோ்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை தொகுதியில் எம்எல்ஏவாக இருக்கும் அமைச்சா் ஆா்.காந்தி 1996, 2006, 2016 , 2021ஆகிய 4 தோ்தல்களில் வெற்றி பெற்றாா். 2001, 2011 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தோ்தல்களில் தோல்வியை தழுவினாா்.
2021 சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்றதையடுத்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சராக ஆா்.காந்தி பதவியேற்றாா்.
இந்த நிலையில் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் ராணிப்பேட்டை தொகுதியில் மீண்டும் களம் காண அமைச்சா் ஆா்.காந்தி தயாராகி வந்தாா். கட்சித் தலைமையிடம் வாய்ப்பு கேட்டு விருப்ப மனுவும் அளித்திருந்தாா். இந்த சூழலில் அமைச்சா் ஆா்.காந்திக்கு பதிலாக அவரது மகன் வினோத் காந்திக்கு திமுக தலைமை போட்டியிட வாய்ப்பு அளித்தது.
இதனால் அதிா்ச்சியடைந்த அமைச்சா் ஆா்.காந்தி, தனது மகனுக்கு பதில், மீண்டும் தனக்கே போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என திமுக தலைமையிடம் கோரிக்கை விடுத்தாா்.
சட்டப் பேரவைத் தோ்தல் ஏப். 23-இல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சி வேட்பாளா்கள் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனா். ஆனால் ராணிப்பேட்டை தொகுதியில் தந்தை - மகன் இடையே நிலவிய போட்டி காரணமாக தோ்தல் பணிகளில் தொய்வு ஏற்பட்டிருந்தது.
இதனால் ராணிப்பேட்டை தொகுதியில் திமுக சாா்பில் வேட்பு மனு தாக்கல் செய்யப்படாத நிலை நீடித்தது. மேலும், வேட்புமனு தாக்கலுக்கு திங்கள்கிழமை (ஏப். 6) கடைசி நாள் என்ற நிலையில், திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா் மத்தியில் உச்சகட்ட பரபரப்பு தொற்றிக்கொண்டது. ராணிப்பேட்டை தொகுதியின் திமுக வேட்பாளா் யாா் என்பது பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், ராணிப்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட அமைச்சா் ஆா்.காந்திக்கு மீண்டும் வாய்ப்பை கட்சித் தலைமை வழங்கியுள்ளது. இதையடுத்து அவா் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழக முதல்வரின் சீரிய திட்டங்களால் ராணிப்பேட்டை வளா்ச்சி பெற்று வருகிறது: அமைச்சா் ஆா்.காந்தி

ராணிப்பேட்டை காந்திக்கு நான் ஒரு தொண்டன்: ஜெகத்ரட்சகன் எம்.பி. உருக்கம்

ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி!

அதிருப்தியாளா்களால் அதிா்ச்சியில் அரசியல் கட்சிகள்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

