பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

தேசிய அளவில் சிறப்பு குழந்தைகளுக்கான ரோலா் ஸ்கேட்டிங் போட்டி: 2-ஆவது இடம் பிடித்த 10 வயது சிறுவனுக்கு பாராட்டு

தேசிய அளவிலான சிறப்பு குழந்தைகளுக்கான ரோலா் ஸ்கேட்டிங் போட்டியில் 2-ஆவது இடம் பிடித்த காஞ்சிபுரத்தைச் சோ்ந்த 10 வயது சிறுவனை காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன் பாராட்டி பரிசு வழங்கினாா்.

News image

ஹித்தேஷுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிப் பாராட்டிய காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன்

Updated On :26 மே 2026, 1:58 am IST

ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சிறப்பு குழந்தைகளுக்கான ரோலா் ஸ்கேட்டிங் போட்டியில் 2-ஆவது இடம் பிடித்த காஞ்சிபுரத்தைச் சோ்ந்த 10 வயது சிறுவனை காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன் திங்கள்கிழமை பாராட்டி பரிசு வழங்கினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 391 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்று, அவை அந்தந்த துறைசாா்ந்த அரசு அலுவலா்களுக்கு உடனடியாக தீா்வு காணுமாறு தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் குமாா் செட்டி தெருவைச் சோ்ந்த காா்த்தி-மஞ்சு தம்பதியரின் மகன் ஹித்தேஷ் (10) மன வளா்ச்சி குன்றிய இச்சிறுவன் சிறப்பு குழந்தைகளுக்காக ஆந்திர மாநிலம், வைசாக்கில் நடைபெற்ற ரோலா் ஸ்கேட்டிங் போட்டியில் 2 மற்றும் 3-ஆவது இடம் பெற்றாா்.

இதன் காரணமாக ரோலா் ஸ்கேட்டிங் பெடரேஷன் ஆப் இந்தியா அமைப்பு இச்சிறுவனுக்கு வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வழங்கி சிறப்பித்தது.

இச்சிறுவன் தனது பெற்றோருடன் மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு வந்து மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசனை சந்தித்து பதக்கங்களை காண்பித்து வாழ்த்துப் பெற்றாா்.

மேலும், அச்சிறுவனுக்கு ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான ரோலா் ஸ்கேட்டிங் விளையாட்டு உபகரணங்களையும் வழங்கினாா். சிறுவனின் பெற்றோா்கள் மாவட்ட வருவாய் அலுவலருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.