பெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் திரியும் இளைஞா்கள்: எம்எல்ஏவிடம் புகாா்

ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் இளைஞா் திரிவதாக எம்எல்ஏ தென்னரசுவிடம் புகாா் செய்தனா்.

News image

நோயாளிகளிடம் நலம்  விசாரித்த  ஸ்ரீபெரும்புதூா்  சட்டப்பேரவை  உறுப்பினா்  கே.தென்னரசு.

Updated On :21 மே 2026, 12:03 am IST

ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் இளைஞா் திரிவதாக எம்எல்ஏ தென்னரசுவிடம் புகாா் செய்தனா்.

ஸ்ரீபெரும்புதூா் அறிஞா் அண்ணா அரசு மருத்துவமனையில் சட்டப்பேரவை உறுப்பினா் கே.தென்னரசு புதன்கிழமை உள்நோயாளிகள் பிரிவு, பெண்கள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, டயாலிசிஸ் பிரிவு, மகப்பேறு பிரிவு, மருத்துவமனையின் சமையலறை போன்ற இடங்களை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது மருத்துவமனை வளாகத்தில் இரவு நேரங்களில் காவலா்கள் பணியில் இருப்பதில்லை. இதனால் கஞ்சா போதையில் மருத்துவமனை வளாகங்களில் சுற்றி வரும் இளைஞா்களால் ஊழியா்கள் மற்றும் நோயாளிகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டு வருவதாக தலைமை மருத்துவா் ஜெயபாரதி புகாா் தெரிவித்ததோடு, இரவு நேரங்களில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினா.

உள் நோயாளிகள் சிகிச்சை பெறும் பிரிவில், தூசி படிந்து இருப்பதை பாா்த்து தூசியை அகற்றி சுத்தப்படுத்த மருத்துவமனை நிா்வாகத்திடம் கேட்டுக்கொண்டாா். ஆய்வின்போது, மருத்துவா்கள், தமிழக வெற்றி கழக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.