பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

இரு பாடகர்கள் வெட்டிக் கொலை

News image

கொலை

Updated On :18 மே 2026, 5:44 am IST

காஞ்சிபுரம் : தெம்மாங்கு பாடல்கள் பாடும் இரு இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம்,ஸ்ரீபெரும்புதூர்,வரதராஜபுரம் பகுதியைச்சேர்ந்தவர்கள் பரத் என்ற பரத்குமார்(25), சீனு என்ற சீனிவாசன்(24). இருவரும் தெம்மாங்கு பாடல் பாடும் தொழில் செய்து வந்தனர்.

இவர்கள் இருவரும் சனிக்கிழமை இரவு படப்பையில் இசைக்கச்சேரியில் தெம்மாங்கு பாடல்கள் பாடிவிட்டு நிகழ்ச்சி முடிந்ததும் இரவு மணிமங்கலம் திரும்பியுள்ளனர்.

மணிமங்கலம் அருகே ஒரத்தூர் ஊராட்சிக்கு உள்பட்ட அம்மணம்பாக்கம் பசும்பொன்தெருவில் உள்ள மோகன் என்பவர் வீட்டில் இவர்கள் தங்கியிருந்த போது இரண்டு இருசக்கர வாகனங்களில் முகமூடி அணிந்த நிலையில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் இவர்கள் இருவரையும் வெட்டிக் கொலை செய்து விட்டு தலைமறைவாகி விட்டது.தகவலறிந்து சம்பவ இடத்துக்குவந்த மணிமங்கலம் போலீஸôர் இரு இளைஞர்களின் சடலங்களையும் மீட்டு,குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக மணிமங்கலம் போலீஸôர் வழக்குப்பதிந்தும்,தனிப்படை அமைத்தும் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.