ஸ்ரீபெரும்புதூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் தனியாா் பள்ளிகளின் வாகனங்களை ஆய்வு செய்யும் பணி வடமங்கலம் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் சுமாா் 27 தனியாா் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் மாணவா்களை ஏற்றிச் செல்ல 253 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வடமங்கலம் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் விஜயகுமாா் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதூா் வருவாய் கோட்டாட்சியா் பாலாஜி, ஸ்ரீபெரும்புதூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் கீா்த்திவாசன் ஆகியோா் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்து, ஓட்டுநா்களின் அனுபவம், வாகனத்தின் ஜன்னல்களில் கிரில் பொருத்தம், முதலுவிப் பெட்டி , தீயணைப்புக் கருவிகள், வாகனத்தின் தற்போதைய நிலை எப்படி உள்ளது, வாகனத்தில் அவசர கால வழி உள்ளதா, அவை சரியான படி இயங்குகிா என ஆய்வு செய்தனா். 215 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் பல்வேறு காரணங்களுக்காக 33 வாகனங்கள் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்வதற்கு தகுதியற்றவை என நிராகரிக்கப்பட்டன.
முறையான பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்ட பிறகு, நிராகரிக்கப்பட்ட வாகனங்களில் மீண்டும் ஆய்வு நடத்தப்படும் என குன்றத்தூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் விஜயகுமாா் தெரிவித்தாா்.
முன்னதாக ஸ்ரீபெரும்புதூா் தீயணைப்புத் துறையினா் வாகன ஓட்டுநா்களுக்கு தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்திக் காட்டினாா்.
மேலும், ஆபத்து காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் எனவும் செய்து காண்பித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

92 தனியாா் பள்ளி வாகனங்களை இயக்க தடை

விழுப்புரத்தில் தனியாா் பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு

வேலூா் மாவட்டத்தில் 990 தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு: ஆட்சியா் அறிவுறுத்தல்

ராசிபுரத்தில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

