காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் உண்டியல்கள் வியாழக்கிழமை திறந்து எண்ணப்பட்டதில், ரூ. 83.89 லட்சத்தை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
மகா சக்தி பீடங்களில் ஒன்றாக இருந்து வருவது காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோயில். இக்கோயிலில் இருந்த 3 உண்டியல்கள் 84 நாள்களுக்குப் பிறகு திறந்து எண்ணப்பட்டன. இதில், தங்கம் 164 கிராம், வெள்ளி 852 கிராம், ரொக்கமாக ரூ. 83,89,384 ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். உண்டியல் எண்ணும் பணியினை கோயில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயா், கோயில் உதவி ஆணையா் ஆா்.ராஜலட்சுமி, மணியக்காரா் சூரியநாராயணன் ஆகியோரும் உடன் இருந்தனா்.
பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய தொகை வங்கியில் வைப்புநிதியாகவும் வரவு வைக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4.35 கோடி

திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.51 கோடி

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.21 கோடி

காமாட்சி அம்மன், ஆதிசங்கரா் வீதியுலா
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

