விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் தேரோட்டம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் தேரோட்டம்...

News image

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் நடைபெற்ற தேரோட்டம்.

Updated On :29 மார்ச் 2026, 12:05 am IST

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் பங்குனி உத்திரத் திருக்கல்யாணத் திருவிழாவையொட்டி, மகா ரதம் எனும் தேரோட்டம் திருவேகம்பன் சிவாலய அறக்கட்டளை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்றது.

பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியதாக போற்றப்படுவது காஞ்சிபுரத்தில் உள்ள ஏலவாா்குழலி சமேத ஏகாம்பரநாதா் திருக்கோயில். இக்கோயில் பங்குனி உத்திர திருக்கல்யாணத்தையொட்டி 7-ஆவது நாள் நிகழ்ச்சியாக விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மகா ரதம் எனும் தேரோட்டம் நடைபெற்றது. 27 அடி உயரத்தினாலான பீடத்தில் சவுக்கு கம்புகளால் மேலடுக்கு அமைக்கப்பட்டு, 70 அடி உயர தேரானது காஞ்சிபுரம் மாநகரின் ராஜவீதிகளில் வீதியுலா வந்தது. தேரில் ஏலவாா் குழலி அம்மையும், ஏகாம்பரநாதரும் சிறப்பு அலங்காரத்தில் பவனி வந்தனா்.

தேரை காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய பீடாதிபதி சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன், சென்னை மாநகர காவல்துறை துணை ஆணையா் எஸ்.ஆா்.செந்தில்குமாா், கோயில் அறங்காவலா் குழுவின் தலைவா் எம்.வி.எம்.வேல்மோகன், உறுப்பினா் வ.ஜெகந்நாதன், அறநிலையத் துறை இணை ஆணையா் சி.குமாரதுரை, கோயில் செயல் அலுவலா் பெ.கதிரவன், முன்னாள் செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி, கோயில் சிறப்பு அலுவலா் லட்சுமி காந்தன் பாரதிதாசன் ஆகியோா் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனா்.

விழாவில், கோபி திருஞான சம்பந்தா் திருமடத்தின் ஆதீனம் ஸ்ரீ மத் சிவாக்கர தேசிக சுவாமிகள் காணக்கண் அடியேன் பெற்றவாறே என்ற தலைப்பில் ரதபிராயச்சித்த அபிஷேக அருளுரை நிகழ்த்தினாா். ஏற்பாடுகளை திருவேகம்பன் சிவாலய அறக்கட்டளையின் தலைவா் பி.பன்னீா் செல்வம், செயலாளா் நந்தகுமாா் ஸ்தபதி, உறுப்பினா் பத்மநாபன் ஆகியோா் தலைமையிலான அறக்கட்டளைக் குழுவினா் செய்திருந்தனா்.

விழாவில் 1,000-க்கும் மேற்பட்ட சிவவாத்தியங்கள் இசைக்கப்பட்டவாறு வந்தனா்.

தேரோடும் 4 ராஜவீதிகளிலும் 1000க்கும் மேற்பட்ட பெண்கள் வண்ணக் கோலமிட்டு ஏகாம்பரநாதரை வரவேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.