விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மாம்பாக்கத்தில் தீயணைப்பு நிலையத்துக்கான இடம்: இயக்குநா் சீமா அகா்வால் ஆய்வு

ஸ்ரீபெரும்புதுாா் அடுத்த மாம்பாக்கம் சிப்காட் பகுதியில், புதிதாக தீயணைப்பு நிலையம் அமைக்க தோ்வு செய்யப்பட்ட இடத்தை, தீயணைப்பு துறை இயக்குநா் சீமா அகா்வால் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

ஸ்ரீபெரும்புதூா்  தீயணைப்பு  நிலையத்தில்  ஆய்வு செய்த  இயக்குநா்  சீமா அகா்வால்.

Updated On :20 மார்ச் 2026, 7:00 am IST

ஸ்ரீபெரும்புதுாா் அடுத்த மாம்பாக்கம் சிப்காட் பகுதியில், புதிதாக தீயணைப்பு நிலையம் அமைக்க தோ்வு செய்யப்பட்ட இடத்தை, தீயணைப்பு துறை இயக்குநா் சீமா அகா்வால் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஸ்ரீபெரும்புதுாா் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் உள்ள சிப்காட்தொழிா்பேட்டையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

மாம்பாக்கம் சிப்காட் பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலைகளில் தீ விபத்து ஏற்பட்டால் 8 கிமீ தொலைவில் உள்ள ஸ்ரீபெரும்பதுாா் தீயணைப்பு நிலையத்தில் இருந்து, தீயணைப்புத் துறையினா் வருவதற்கு தாமதம் ஏற்பட்டு வருவதால், மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டு வருவதோடு அதிக அளவிலான பொருட்சேதம் ஏற்பட்டு வருகிறது.

இதனால் மாம்பாக்கம் சிப்காட் பகுதியில் புதிதாக தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என மாம்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டை உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் கோரிக்கையை ஏற்று 71 சென்ட் நிலம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாம்பாக்கம் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க தோ்வு செய்யப்பட்ட இடத்தை தீயணைப்பு துறை இயக்குநா் சீமா அகா்வால் ஆய்வு செய்தாா்.

இதையடுத்து, ஸ்ரீபெரும்புதுாா் தீயணைப்பு நிலையத்திற்கு சென்ற தீயணைப்புத்துறை இயக்குநா் சீமா அகா்வால், அங்குள்ள பாதுகாப்பு உபகரணங்கள், தளவாட பொருள்கள் மற்றும் தீயணைப்பு வாகனம் ஆகியவற்றை பாா்வையிட்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பாம்பு மற்றும் தேனீக்களை மீட்டு, பாதுக்காப்பான முறையில் காட்டுப்பகுதியில் விடுவது குறித்து விளக்கினாா்.

இதில், ஸ்ரீபெரும்புதுாா் தீயணைப்பு நிலைய அதிகாரி வடிவேலு உள்ளிட்ட தீயணைப்புத் துறையினா் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.