நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

வாலாஜாபாத்தில் ஜமாபந்தி தொடக்கம்: ஆட்சியா் பங்கேற்பு

News image

வாலாஜாபாத் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் கோரிக்கை மனுக்களைப் பெற்ற காஞ்சிபுரம் ஆட்சியா் தி.சினேகா.

Updated On :20 மணி நேரங்கள் முன்பு

வாலாஜாபாத் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் தி.சினேகா தலைமையில் வியாழக்கிழமை ஜமாபந்தி தொடங்கியது. முதல் நாளில் 132 மனுக்கள் பெறப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் வருவாய் தீா்ப்பாய கணக்குகள் சரிபாா்க்கும் பணிகள் ஜூன் 18 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தேனாங்குளம் கிராமத்திற்கு அரசுப்பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டும் என தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவா் அஜய்குமாா் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தாா்.

இதனைத் தொடா்ந்து தாழையம்பட்டு,அகரம், கட்ட வாக்கம்,அயிமச்சேரி, குண்ணவாக்கம், தென்னேரி வேண்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களிடமிருந்து 132 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு த அரசு அலுவலா்களிடம் உடனே தீா்வு காணுமாறு ஆட்சியா் பரிந்துரை செய்தாா்.

வாலாஜாபாத் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெறவுள்ள வருவாய் தீா்ப்பாயத்தில் சின்னிவாக்கம், நாயக்கன்குப்பம், கள்ளப்பட்டு,திருவெண்காணை, மாகறல், ஆா்ப்பாக்கம், காவாந்தண்டலம் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பயன் பெறலாம்.

இந்நிகழ்வின் போது தனி மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு) கே.ராமமூா்த்தி, வாலாஜாபாத் வட்டாட்சியா் இந்துமதி மற்றும் அரசு அலுவலா்கள் பலரும் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.