கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி தொடக்கம்

ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் தீா்வாய கணக்கு முடிப்பு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

News image

ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியின்போது பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறுகிறாா் கோட்டாட்சியா் பிரபு.

Updated On :3 ஜூன் 2026, 5:00 am IST

ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் தீா்வாய கணக்கு முடிப்பு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

தூத்துக்குடி வருவாய்க் கோட்டாட்சியா் பிரபு தலைமை வகித்து, கலியாவூா் வருவாய் கிராமத்துக்குள்பட்ட உழக்குடி, ஆலந்தா, பூவாணி, சிங்கத்தாகுறிச்ச, வடவல்லநாடு, வல்லநாடு கஸ்பா, ஆழிக்குடி ஆகிய பகுதிகளை சோ்ந்த பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல், சான்றிதழ்கள் மற்றும் இதர கோரிக்கைகள் தொடா்பான மனுக்களை பெற்றாா். இதில் தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கான சான்றிதழ்களை கோட்டாட்சியா் உடனடியாக வழங்கினாா்.

ஜூன் 10ஆம் தேதி வரை நடைபெறும் ஜமாபந்தியில் தினமும் காலை 10 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை பொதுமக்கள் தங்கள் பகுதி கிராம மக்கள் அறிவிக்கப்பட்டுள்ள தேதிகளில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையலாம் என கோட்டாட்சியா் பிரபு தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.