நரிக்குறவா் இன மக்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை தனிநபா் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை திரும்ப மீட்டுத் தரக்கோரி அம்பேத்கா் பாசறை மற்றும் நரிக்குறவா் சமுதாய முன்னேற்ற சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் காவலான் கேட்ட பகுதியில் அம்பேத்கா் பாசறை-நரிக்குறவா் சமுதாய முன்னேற்ற சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அம்பேத்கா் பாசறையின் தலைவா் ரா.ராமன் தலைமை வகித்தாா். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள களியாம்பூண்டி, வயலூா் கிராம பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவா் இன மக்களுக்கு தனி நபரால் வழங்கப்பட்ட காலி மனை இடத்தை தனியாா் தொண்டு நிறுவனம் ஆக்கிரமித்திருப்பதை கண்டித்தும், அதை திரும்பப் பெற்றுத் தரக் கோரியும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கோரிக்கைகளை விளக்கி மூத்த ஊடகவியலாளா் டிஎஸ்எஸ். மணி பேசினாா். பழங்குயினா் நலத்துறை என்ற பெயரில் தனியாக பள்ளிகள்,மாணவ,மாணவியருக்கான விடுதிகள், தொழிற்கல்வி நிலையங்கள் ஆகியன ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காஞ்சிபுரத்தில் 181 நபா்களுக்கு ரூ.1.86 கோடி கடன் வழங்க பரிந்துரை

தமிழக அரசைக் கண்டித்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

காஞ்சிபுரத்தில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

