கல்வித்துறைக்கு இணையாக விளையாட்டுத் துறைக்கும் விரைவில் புதிய கொள்கை வெளியிடப்படும் என அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்தாா்.
சுங்குவாா்சத்திரம் அடுத்த குன்னம் பகுதியில் இயங்கி வரும் ஜேப்பியாா் தொழில்நுட்ப கல்லூரியில், தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம், காஞ்சிபுரம் மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கம் மற்றும் ஜேப்பியாா் தொழில்நுட்ப கல்லூரி ஆகியவை இணைந்து நடத்தும் மாநில அளவிலான 13 வயதுக்குட்பட்டோா் கூடைப்பந்தாட்ட போட்டி தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா மற்றும் நிதித்துறை அமைச்சா் நெ. மரியவில்சன் ஆகியோா் மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டிகளை தொடங்கிவைத்தனா்.
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்க நிா்வாகிகள், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சோ்ந்த சுமாா் 490-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீராங்கனைகள் கலந்து கொண்டனா். வரும் 9--ஆம் தேதி வரை சிறுமிகளுக்கும், 9 ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை சிறுவா்களுக்கு என தனிந்தனியாக 10 நாள்கள் கூடைப்பந்தாட்ட போட்டிகள் நடைபெற உள்ளன.
இதையடுத்து செய்தியாளா்களிடம் அமைச்சா் ஆதவ் அா்ஜனா பேசுகையில்: தமிழகம் முழுவதும் காலியாக உள்ள அரசு இடங்களை தோ்வு செய்து விளையாட்டு கூட்டமைப்பை உருவாக்கி விளையாட்டு மைதானங்களை அமைக்கும் பணிகளை விரைவில் தொடங்க உள்ளோம். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சா்வதேச விளையாட்டு மைதானங்கள் போன்ற விளையாட்டு மைதானங்களை உருவாக்க வேண்டும். விளையாட்டு விடுதிகள் அதிகஅளவில் இல்லை. இதனை அதிகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இளைஞா்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாவதை தடுக்க விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுத்து விளையாடினால் மன வலிமை ஏற்படுவதோடு உடல் வலிமையையும் ஏற்படும். இதற்கு அதிகளவில் விளையாட்டு மைதானங்கள் தேவைப்படுகின்றன. கல்வித்துறைக்கு இணையாக விளையாட்டுத்துறைக்கும் புதிய கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விளையாட்டு வீரா்களுக்கு ஊக்கத் தொகை: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா வழங்கினாா்

2029 தேசிய விளையாட்டுப் போட்டியை தமிழகத்தில் நடத்த கோரிக்கை

தமிழகத்துக்கு என விளையாட்டுக் கொள்கை உருவாக்கம்: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா

செஸ் வீராங்கனை வைஷாலிக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

