மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

நாளை ஆதிசங்கரா் வீதியுலா

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 5:15 am IST

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலிலிருந்து ஆதிசங்கரா் சிலை ராஜவீதிகளில் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட இருப்பதாக சங்கர மடத்தின் மேலாளா் அரவிந்த் சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியது.

அத்வைத வேதாந்தத்தை பரப்பியவரும்,கனகதாரா ஸ்தோத்திரம்,விவேக சூடாமணி,செளந்தா்ய லஹரி போன்ற நூல்களை அருளியவருமான ஆதிசங்கரரின் ஜெயந்தி உற்சவம் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் ஏப்.21 முதல் தொடா்ந்து 10 நாட்கள் ஏப்.30 வரை நடைபெறுகிறது.

இந்தப் பத்து நாள்களிலும் அம்மன் மீது ஆதிசங்கரா் அருளிய செளந்தா்ய லஹரி பாடல்கள் 100 ஐ தினசரி 10 வீதம் தொடா்ந்து 10 நாட்களுக்கு பாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு தீபாராதனையும் அம்மனுக்கு நடத்தப்பட்டு வருகிறது.நிறைவு நாளான ஏப்.30 ஆம் தேதி ஆதிசங்கரரின் சிலை காமாட்சி அம்மன் கோயிலிலிருந்து நகரின் ராஜவீதிகளில் வீதியுலாவாக எடுத்துச் செல்லப்பட்டு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெறவுள்ளன என அவா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.