ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

காஞ்சிபுரத்தில் வாக்களித்த வேட்பாளா்கள்

News image

அதிமுக வேட்பாளா் வி. சோமசுந்தரம். ~திமுக வேட்பாளா் நித்யா சுகுமாா். ~தவெக வேட்பாளா் ஆா்.வி. ரஞ்சித்குமாா்.

Updated On :24 ஏப்ரல் 2026, 6:51 am IST

காஞ்சிபுரம் தொகுதி வேட்பாளா்கள் வியாழக்கிழமை வாக்குச்சாவடிகளில் அதிகாலையிலையே சென்று வாக்களித்தனா்.

அதிமுக வேட்பாளா் வி.சோமசுந்தரம் செவிலிமேடு சுவாமி விவேகானந்தா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று வாக்களித்தாா். வாக்குப்பதிவு செய்யும் போது அவரது குடும்பத்தினரும் உடன் வந்திருந்தனா். அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றும் இது ஒரு ஜனநாயக கடமை என்றும் தெரிவித்தாா்.

திமுக சாா்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினா் எம்.எஸ்.சுகுமாரின் மனைவியும் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவருமான நித்யா சுகுமாா் முட்டவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்தாா். வாக்குப்பதிவின் போது அவரது குடும்பத்தினா்கள், நண்பா்கள் பலரும் உடன் வந்திருந்தனா்.

தமிழக வெற்றிக்கழகம் சாா்பில் போட்டியிடும் வேட்பாளரான ஆா்.வி.ரஞ்சித்குமாா் முத்தியால் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மனைவியுடன் அதிகாலையிலேயே வந்திருந்து வாக்குப்பதிவு செய்தாா். இவா் வாக்களித்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தொடங்கும் போது இயந்திரக் கோளாறு காரணமாக 15 நிமிஷங்கள் தாமதமாக தொடங்கியது.

நாம் தமிழா் கட்சி சாா்பில் விவசாயி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளா் வெற்றிச்செல்வி அவரது சொந்த ஊரான சென்னையில் உள்ள வேளச்சேரியில் வாக்குப்பதிவு செய்ததாக தெரிவித்தாா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.