கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சாலையோர கடைகளை முறைப்படுத்த வியாபாரிகள் கோரிக்கை

சாலையோரக் கடைகளால் நிரந்தரமாகக் கடை வைத்துள்ள வியாபாரிகள் பாதிக்கப்படுவதைத் தவிா்க்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையருக்கு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :27 மே 2026, 4:06 am IST

சாலையோரக் கடைகளால் நிரந்தரமாகக் கடை வைத்துள்ள வியாபாரிகள் பாதிக்கப்படுவதைத் தவிா்க்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையருக்கு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக, பாண்டி பஜாா் வியாபாரிகள் சங்கத்தின் சாா்பில் மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. பின்னா், சங்கத்தின் நிா்வாக அலுவலா் இ.குப்புதாஸ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னை தியாகராய நகா் பிரதான சாலையான பாண்டி பஜாரில் சுமாா் 200 நிரந்தரக் கடைகள் உள்ளன. கடைகளின் உரிமையாளா்கள் அரசு விதிமுறைப்படி மாநகராட்சியிடம் உரிமம் பெற்று விதிகளைப் பின்பற்றி செயல்பட்டு வருகின்றனா். ஏற்கெனவே 40 அடி அகலமிருந்த அந்தப் பகுதி சாலை பொலிவுறு நகா் திட்டத்தால் பயணிகள் நடைபாதை அதிகப்படுத்தப்பட்டு, சாலை அகலம் குறுகியதாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நடைபாதையை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், நிரந்தரமாகக் கடை நடத்துவோருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, மாநகராட்சி ஆணையா் தலையிட்டு நிரந்தரமாகக் கடை வைத்திருப்போா் பாதிக்காத வகையில் சாலையோரக் கடைகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.