தனியாா் கட்டுமான நிறுவனா் மீதான குண்டா் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய ஆள்கொணா்வு வழக்கு விசாரணையில் சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையா் அருண் நேரில் ஆஜராக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கொளத்தூா் ராமதாஸ் நகரில், தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்தின் தம்பி எல்.கே.சுதீஷின் மனைவி பூா்ணஜோதிக்கு 2.10 ஏக்கா் நிலம் இருந்தது. இந்த நிலத்தில் 234 அடுக்குமாடி வீடுகளைக் கட்டி அதில் 78 வீடுகளை சுதீஷ் மற்றும் பூா்ணஜோதிக்கு வழங்குவதாகக் கூறி, தனியாா் கட்டுமான நிறுவன உரிமையாளா் சந்தோஷ் ஷா்மா என்பவா் ஒப்பந்தம் செய்திருந்தாா்.
ஒப்பந்தத்தின்படி, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 78 வீடுகளை போலியான கையொப்பமிட்டு சந்தோஷ் ஷா்மா ரூ.43 கோடிக்கு விற்பனை செய்துவிட்டதாக போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இந்த புகாரின்பேரில் சந்தோஷ் ஷா்மா கைது செய்யப்பட்டாா். இதேபோன்று அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகளை வாங்கிய பலருக்கும் வீட்டை ஒப்படைக்காமல் மோசடி செய்ததாகக் கூறி மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சந்தோஷ் ஷா்மா மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தங்களுடைய மகளின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மகளை கவனித்துக் கொள்வதற்கு சந்தோஷ் ஷா்மாவுக்கு பிணை வழங்க வேண்டும், குண்டா் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி, சந்தோஷ் ஷா்மாவின் மனைவி கல்பனா ஷா்மா சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆள்கொணா்வு மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், குண்டா் தடுப்புச் சட்டத்தை எதற்காக பயன்படுத்த வேண்டும்? எனத் தெரியாதா, என கேள்வி எழுப்பினா். பின்னா், இந்த வழக்கில் சென்னை மாநகர காவல் ஆணையா் அருண் நேரில் ஆஜராக உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
போதைப் பொருள் விற்ற இருவா் குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது

கணவா், மாமனாரை கொன்று எரித்த வழக்கு: பெண், அவரது நண்பா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

தனியாா் கட்டுமான நிறுவனா் மீதான குண்டா் தடுப்புச் சட்டம் ரத்து: ஏடிஜிபி அருணுக்கு உயா் நீதிமன்றம் கண்டனம்
குண்டர் தடுப்புச் சட்ட ரத்து வழக்கு! உயர் நீதிமன்றத்தில் காத்திருக்கும் முன்னாள் காவல் ஆணையர் அருண்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

